districts

img

எம்எஸ்எம்இ 43 பி(எச்) சட்டத்தை உடனே திரும்பப் பெறு

நாமக்கல், பிப்.28- ஒன்றிய அரசு அறிவித்துள்ள எம்எஸ்எம்இ 43 பி (H) சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, வேலை  நிறுத்த போராட்டத்தால்,  சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் பல கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதித்துள்ளதாக சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.  சேலம் மாவட்டம், எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்க ளும், இந்த விசைத்தறி தொழிலை  நம்பியே சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் இருந்து வருகின்றனர். இதனிடையே, ஒன்றிய அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர ஜவுளி  உற்பத்தி தொழில் செய்து வரு பவர்களுக்கு, எம்எஸ்எம்இ 43 பி (H)  என்ற சட்டத்தை அறிவித்து உL ளது.  இந்த சட்டத்தை திரும்ப பெற  வலியுறுத்தி, எடப்பாடி வட்டா ரத்தில் செயல்பட்டு வரும்  அனைத்து ஜவுளி உற்பத்தியா ளர்கள் கூட்டமைப்பு சார்பில், 2  நாள் அடையாள ஜவுளி உற்பத்தி  நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் 5 கோடி ரூபாய்  மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்ப டும் என கூறப்படுகிறது. இதுகுறித்து, ஜவுளி உற்பத்தி யாளர்கள் கூறுகையில், ஒன்றிய  அரசு அறிவித்துள்ள எம்எஸ்எம்இ 43பி(எச்) என்கிற சட்டம் சிறு,  குறு மற்றும் நடுத்தர ஜவுளி உற் பத்தியாளர்களை பெரும் பாதிப் புக்கு உள்ளாகி உள்ளது. இத னால் பெரிய நிறுவன உற்பத்தியா ளர்களுக்கு மட்டுமே பலன். இந்நிலையில், இச்சட்டத்தை ஒன் றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பதை வலியு றுத்தி இரண்டு நாள் அடையாள உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளோம். இதே நிலை நீடித் தால் தங்களது தொழிலை மாற் றிக் கொள்ள வேண்டி நேரிடும் என வும் வேதனையுடன் தெரிவித்த னர். நாமக்கல் இதேபோன்று, நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு, ராசிபுரம், அத்தனூர், கூன கவுண் டம்பட்டி, வெண்ணந்தூர், பாலப்பா ளையம் உள்ளிட்ட பல்வேறு பகு திகளில், ஒன்றிய அரசின் அவசர சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டனர். இதனால் திருச்செங்கோட்டில் மட்டும் சுமார் 7 கோடி ரூபாய் வரை உற்பத்தி பாதிக்கப்படும். அதுவே, மாவட்டம் முழுவதும் கணக்கிட்டால் பல கோடி ரூபாய் வரை ஜவுளிகள் உற்பத்தி பாதிப் படையும் என விசைத்தறி உரிமை யாளர்கள் தெரிவிக்கின்றனர்.