districts

img

போக்குவரத்து ஓய்வூதியர்களின் தெருமுனை பிரச்சார இயக்கம்

தாராபுரம், டிச.24- தாராபுரத்தில்  அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற் றோர்  நல அமைப்பினர், பொது மக்களை சந்தித்து துண்ட றிக்கை வழங்கி தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர். தாராபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு  அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர்  நல அமைப் பின் தாராபுரம் கிளை சார்பாக, வரும் டிச.29 கோவையில் உள்ள போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு நடை பெற உள்ள மறியல் போராட்டத்தை விளக்கி தெருமுனை  பிரச்சார இயக்கம் சனியன்று நடைபெற்றது. ஊரக வளர்ச்சி  ஓய்வு பெற்றோர்  நல அமைப்பின் மாவட்ட தலைவர் ஆ. மணியன் துவக்கி வைத்தார். வட்டாட்சியர் அலுவலகம், ஐந்து முனை சந்திப்பு, மீனாட்சிபுரம், உப்புதுரைபாளையம், சோளக்கடை வீதி, காமராஜபுரம், பூளவாடிபிரிவு, அண்ணா சிலை, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்க ளுக்கு துண்டு அறிக்கை வழங்கி பிரச்சாரம் நடைபெற்றது.  இதில் ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் கிளை தலைவர் க.வெள்ளைச்சாமி, செயலாளர் மு.நடராஜன், பொருளாளர் ந.முத்துசாமி மற்றும் நா.செங்குட்டுவன், ஆர்.சண்முகம், பி.  பொன்னுசாமி உள்ளிட்ட ஏராளமானோர்  கலந்து கொண்ட னர்.