தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தெருக்கூத்து கலைஞர் கள் கூட்டமைப்பு சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தெருக்கூத்து கலைஞர்கள் வேடமணிந்து தெருக்கூத்து நடத்தினர். இவ்விழாவில் தெருக்கூத்து மற் றும் கிராமிய கலைஞர் சங்க மாநிலத் துணைத்தலைவர் டி.ஆர்.சின்னசாமி, குடியரசு தலைவர் விருது பெற்ற கலை மாமணி பி.பி.கந்தசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் பேரூராட்சி கவுன்சிலர் வே.விஸ்வநாதன், ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.