புதுதில்லி,ஜன.13- பல முக்கிய கருவிகளை கண்டு பிடித்த சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தைத் தனியார் மயமாக்குவதை, ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பால் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, கார்ப்ப ரேட்டுகள் ஆதாயம் அடையும் வகையில் நாட்டின் பொதுச் சொத்துக்களான பல அரசு நிறுவ னங்களைத் தனியாருக்கு விற்று வருகிறது. ஏற்கனவே ஏர் இந்தியா நிறுவனம் தனியாருக்கு விற்கப் பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில் துறையின் கீழ் செயல்படும் சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடட் (சி இ எல்) நிறுவனத்தை விற்க முயற்சி எடுத்துள்ளது. இந்த நிறுவனம் மின்னணு துறையில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி, தேசிய அளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோ பர் 31 ஆம் தேதி நிலையில் இந்த நிறுவனத்துக்கு ரூ;1,592 கோடி அளவில் ஆர்டர்கள் நிலுவையில் உள்ளன. இதன் மூலம் இந்திய அரசுக்கு இந்த நிறுவனம் ரூ..730 கோடி வரை லாபம் கிடைக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கண்டு பிடிப்புகளில் குறிப்பிடத்தக்கவை யாக முதன் முதலாகச் சூரிய மின் கலன் (SOLAR CELL) 1977 ஆம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்ட தாகும் . 1978 ஆம் ஆண்டு சூரிய மின் உற்பத்தி நிலைய வடிவமைப்பை உருவாக்கி 1992 ஆம் வருடம் முதல் சூரிய மின்சக்தி நிலையத்தை உரு வாக்கியது. இதுதவிர ராடார் உள்ளிட்ட பல முக்கிய ராணுவத் தளவாடங்களை இந்நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விற்க அரசு முயற்சி செய்தது. இதற்காக நண்டல் ஃபைனான்ஸ் அண்ட் லீசிங் என்னும் நிறுவனம் ரூ.210 கோடி மதிப்பில் விலைப்புள்ளி அளித்துள்ளது. இதுவே மிகவும் அதிகமான விலைப்புள்ளி என்ப தால் நிறுவனத்தை 2022 மார்ச் மாதத்திற்குள் விற்க அரசு ஆலோ சனை செய்து வருவதாகத் தகவல் கள் வெளியாகியுள்ளன. நிறுவனத்தை விற்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு ஊழியர் கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றன. இவர்களின் கோரிக்கை யை ஒன்றிய அரசு கண்டுகொள் ளாமல் இருந்ததால் , இந்த விவகா ரத்தை நீதிமன்றத்துக்குத் தொழிற் சங்கம் எடுத்துச் சென்றுள்ளது. இதனால் ஒன்றிய அரசு இந்த நிறு வனத்தைத் தனியாருக்கு விற்பதை ஒத்தி வைப்பதாக அறிவித்துள் ளது.