கோவை, அக்.18- அடைக்கலம் கொடுத்த பாலஸ்தீனத்தை அழிக்கத்துடிக்கும், இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையை கண்டித்து கோவையில், சிஐடியு, மாணவர், மாதர், வாலிபர் சங்கங் கள் மற்றும் மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டம் புதனன்று நடைபெற்றது. இஸ்ரேல் ராணுவத்தினர் காசா பகுதியில் நடத்தும் கொடூர தாக்குதலை கண்டித்தும், இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு நடவ டிக்கையை கண்டித்தும், ஒன்றிய அரசின் இஸ்ரேல் ஆதரவு நடவடிக்கையை கண்டித் தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐ டியு, அனைந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந் திய மாணவர் சங்கம், கோவை மக்கள் ஒற் றுமை மேடை ஆகிய அமைப்புகள் இணைந்து முன்னெடுத்தது. சிஐடியு மாவட்டத் தலை வர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்றார். இதில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத்தலைவர் யு.கே. சிவஞானம், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஜோதிமணி, செயலாளர் சுதா, இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் அர்ஜூன், பொருளாளர் தினேஷ்ராஜா, மாண வர் சங்க மாவட்டச் செயலாளர் அசாருதீன், சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர்.வேலு சாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
பிஎஸ்என்எல்
இதேகோரிக்கையை முன்வைத்து, கோவை, ஈரோடு மாவட்டங்களில் பிஎஸ் என்எல் ஊழியர் கூட்டமைப்பு சார்பில் பாலஸ் தீன ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை பிஎஸ்என்எல் தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, கூட்டமைப்பின் தலைவர் ஏ.குடியரசு தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஷாகின் அகமது துவக்கவுரையாற்றினார். ஏஐபிடிபிஏ-வின் அகில இந்திய அமைப்பு செயலாளர் வி.வெங்கட்ராமன் மற்றும் பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலை வர் பாபு ராதாகிருஷ்ணன், மாநில உதவித் தலைவர் சி.சசிகுமரன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இதில், திரளான தொலை தொடர் புத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் டிஎன்டிசிடபில்யு முத்தலிப் நன்றி கூறினார்.
ஈரோடு
ஈரோடு டெலிபோன் பவன் முன் பிஎஸ் என்எல் ஊழியர் சங்கம், ஓய்வூதியர் சங்கம் மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் சார்பில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையை கண் டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.மாணிக்கம் தலைமை வகித் தார். ஈரோடு மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் கன்வீனர் சி.பரமசிவம், ஒப் பந்த ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எம். சையத் இத்ரீஸ் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். இதில் ஓய்வூதியர் சங்க மாவட்டப் பொருளாளர் வி.மணியன், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பழனிச்சாமி, ஒருங்கிணைப்புக் குழு கன்வீனர் கே.பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நீலகிரி
இதேபோல், நீலகிரி மாவட்ட மக்கள் ஒற் றுமை மேடை அமைப்பு சார்பில் கூடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்தை, மக்கள் ஒற்றுமை மேடை கன்வீனர் வாசு துவக்கி வைத்தார். இதில் சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக் கட்சிகள் இனைந்து ஆரப்பாட் டத்தில் ஈடுபட்டன. முன்னதாக ஆர்ப்பாட்டத் தில் பங்கேற்றவர்கள், இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.