districts

img

முறையாக குடிநீர் விநியோகம் கோரி மறியல்

தாராபுரம், மே 29- தாராபுரம் 13 ஆவது வார் டில் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வலியு றுத்தி அப்பகுதி பொது மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சி, 13 ஆவது வார்டுகுட்பட்ட பஜனை மடத்தெருவில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொது மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் தெரி வித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப் பகுதி பொதுமக்கள், பஜனை மடத்தெரு அரசு ஆரம்பபள்ளி அருகே சாலை மறிய லில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் நகர் மன்ற தலைவர் பாப்புக்கண்ணன், நகராட்சி ஆணையாளர் ராமர் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாலை பணிகள் காரணமாக பழுதடைந்த குழாய்கள் உடனடியாக சரி செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் முறைப் படுத்தப்படும் என பாப்புக்கண்ணன் உறுதி யளித்தார். இதைத்தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இப்போராட்டம் காரணமாக அப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.