தாராபுரம், ஜூன் 24- தாராபுரம் அருகே திருமணம் நிச்ச யிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்டதால் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறிய லில் ஈடுபட்டனர். தாராபுரம் அடுத்துள்ள பெல்லம் பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கோபால் (50) இவ ருக்கு திருமணமாகி மாசாணி என்ற மனைவியும், ரம்யா (23) பிரியா (19) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகள் ரம்யாவுக் கும் பொன்னாபுரத்தை சேர்ந்த கோபால் என்பவரது மகன் சின்னராஜ் (எ)ஜாய்சன் (25) என்பவருக்கும் திரும ணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் ஜூலை 13 அன்று திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இரு வீட்டாரும் பத்திரிக்கை அடித்து உறவினர்களுக்கு கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத் தன்று பத்திரிக்கை கொடுத்துவிட்டு வந்த ரம்யாவின் பெற்றோர் வீட்டை திறந்து பார்த்த போது ரம்யா தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து குண்டடம் காவல் துறை வழக்குப்பதிவு செய்து ரம்யா வின் உடலை தாராபுரம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து வெள்ளியன்று காலை அரசு மருத்துவ மனைக்கு வந்த ரம்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ரம்யாவின் உடலை வாங்க மறுத்து சாலை மறிய லில் ஈடுபட்டனர். ரம்யாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், சம்பவத்தன்று ஜாய்சன் வீட்டில் தனியாக இருந்த ரம்யாவுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அவர் சென்ற பிறகு வீட்டில் இருந்த ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினர். உடனடியாக சின்னராஜ் (எ) ஜாய்சனை கைது செய்து விசாரணை நடத்தவேண்டும் என கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல றிந்து தாராபுரம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டார். இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித் ததை தொடர்ந்து சாலைமறியல் கைவி டப்பட்டது.