திருப்பூர், டிச.3- கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தை சீர்குலைக்கும் விதத் தில் தொழிலாளர் சட்டத் தொகுப்பை திணித்திருக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து கட்டு மான தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமானத் தொழிலை கடு மையாக பாதிக்கும் வகையில் கட்டுமான பொருட்களுக்கு விதிக் கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை குறைத்து விலையை கட்டுப் படுத்த வேண்டும். கட்டுமான தொழிலாளர்கள் சட்டங்களை யும், கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தையும் சீர்குலைக்கும் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்பை கைவிட வேண்டும். மாத ஓய்வூதி யம் ரூ.3000 மற்றும் இதர பலன் களை வழங்குவதற்கு மாநி லங்களுக்கு நலவாரியங்களில் ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண் டும்.
புலம்பெயர் தொழிலாளர் சட் டங்களை நாடு முழுவதும் அம லாக்க வேண்டும், வீடில்லாத கட்டு மான தொழிலாளர்களுக்கு இல வச வீடு, அடுக்கு மாடி குடியி ருப்பில் வீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐ டியு கட்டுமான தொழிலாளர் சம் மேளனத்தின் தலைமையில் கட்டு மான தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். திருப்பூர் குமரன் சிலை முன் பாக நடைபெற்ற போராட்டத்தை சிஐடியு தமிழ் மாநில துணைத் தலைவர் எம்.சந்திரன் துவக்கி வைத்துப் பேசினார். இந்த போராட்டத்திற்கு தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சம்மேள னத்தின் பொதுச் செயலாளர் டி.குமார் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் ரமேஷ், மாநிலக்குழு உறுப்பினர் கள் கணேசன், ராஜன், சாலை யோர பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.பாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து ரயில் நிலை யம் முன்பு இருந்து தபால் அலுவ லக சாலையில் மறியல் செய்ய புறப்பட்டு சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து வாகனங் களில் அழைத்துச் சென்று தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர். இதில் பெண் தொழிலாளர்கள் சுமார் 80 பேர் உட்பட 130 பேர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்
நாமக்கல் பூங்கா சாலை முன்பு நடைபெற்ற மறியல் போராட் டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கு.சிவராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செய லாளர் ந.வேலுசாமி, பிஎஸ்என் எல் ஓய்வூதியர் சங்க மாநில உத வித் தலைவர் ப.ராமசாமி, சங்க மாவட்ட துணைத் தலைவர் பி. மாதேஸ்வரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜெயமணி, யுவ ராஜா, துரைசாமி, சுப்பிர மணி, ராணி, நடராஜன், வெங்க டேஸ்வரன் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு சங்கத் தின் மாவட்ட தலைவர் வி.எம். ராஜேந்திரன் தலைமை தாங்கி னார். இதில் சிஐடியு மாவட்ட தலைவர் எம்.அசோகன், மாவட்ட துணைச் செயலாளர் கள் கே.மோகன், எஸ். முத்துக் குமார், மாவட்ட பொருளாளர் கே.கண்ணன், மாவட்ட துணைத் தலைவர்கள் சரபோஜன், துரை சாமி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.சிங்காரவேலு தலைமையில் மறியல் போராட் டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் சி.கருப்பண்ணன், மாவட்ட தலைவர் சி.மயில்வே லன், மாவட்ட பொருளாளர் சி.மோகன், நிர்வாகிகள் கோவிந்த ராஜ், எஸ்.எம்.தேவி உள்ளிட்டு கட்டுமான தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் பங் கேற்று கைதாகினர்.