உதகை, பிப். 15- ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற்சா லையில் உற்பத்தியை துவக்க வேண் டும், நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை வலியுறுத்தி சிஐடியு தலைமையில் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற் சாலை உற்பத்தியை உடனே தொடங்க வேண்டும். ஜனவரி மாத முழு ஊதி யத்தை உடனே வழங்க வேண்டும். கால தாமதமின்றி உடனடியாக பேச்சு வார்த் தையை துவக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஸ்டெர்லிங் பயோடெக் எம்ப்ளாயீஸ் யூனியன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்டெர்லிங் பயோடெக் எம்ப்ளா யீஸ் யூனியன் தலைவர் ஆபிரகாம் தலைமையில் நடைபெற்ற போராட்டத் தில், எஸ்பிடி செயலாளர் யு.மூர்த்தி, கௌரவத் தலைவர் கே.ராஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். போராட்டத்தை வாழ்த்தி சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. வினோத், பொருளாளர் நவீன் சந்திரன் ஆகி யோர் உரையாற்றினர். தொழிலாளர்களின் போராட்டத் தையடுத்து, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் வருவாய் கோட் டாட்சியர், வட்டாட்சியர் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உட னடியாக நிறுத்தி வைக்கப்பட்ட சம்ப ளத்தை உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதர கோரிக்கை கள் உடனடியாக பரிசீலிக்கப்படும் என்கிற உறுதியை அளித்தனர். இத னைத்தொடர்ந்து போராட்டம் தற்கா லிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பி னர். முடிவில், ஸ்டெர்லிங் பயோடெக் எம்ப்ளாயீஸ் யூனியன் பொருளாளர் அன்பரசு நன்றி கூறினார்.