20 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவை வியாழனன்று மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையேற்றார். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்புராயன், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், திருப்பூர் சார் ஆட்சியர் சௌமியா ஆனந்த், மாநகராட்சி மூன்றாவது மண்டலத் தலைவர் கோவிந்தசாமி, திருப்பூர் பின்னல் புக் ட்ரஸ்ட் நிர்வாக அறங்காவலர் காமராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.