districts

img

நம் மகத்தான வாழ்வியல் பண்பாட்டை உலகுக்கு எடுத்துச் செல்வோம் மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் பேச்சு

திருப்பூர், ஏப்.28 - நம் மகத்தான வாழ்வியல் பண்பாட்டை உலகுக்கு எடுத்துச் செல்வோம் என மாநில  சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் ஜி. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறினார். திருப்பூர் புனித ஜோசப் கல்லூரியில் வெள்ளியன்று மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத் தார்.  மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமை யில், மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் ஜி.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்,  திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர்  க. செல்வராஜ் மற்றும் மேயர் ந.தினேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் ஜி.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேசியதாவது: தற்போது 18 வயது  குழந்தையின் பெற்றோர்கள் பட்டதாரியாக  இல்லை. ஆனால் வருங்காலம் அப்படி இல்லா மல் அனைவரும் படித்தவர்களாகதான் இருப்பீர்கள். இதற்கான காரணம் அறிவு  இல்லாமல் இல்லை. கடந்த கால சூழ்நிலை தான் காரணம். 2000 ஆண்டுகளுக்கு முன்பு  53 பெண்பால் புலவர்கள் இருந்தார்கள். எவ் வளவு செழுமையாக வாழ்ந்த இந்த இனம் தற் போது

தாய் கூட படிக்க முடியாத சூழ்நிலை  இருந்ததை மாணவர்கள் சிந்திந்து பார்க்க வேண்டும். இந்திய மொழிகளில் 114 நாடுகளில் தமிழ் மொழி பேச்சு மொழியாக இருக்கிறது. மாண வர்கள் ஆகிய உங்களுக்கு கொடுக்கப்பட்ட தலைப்புகளில் மற்றவர்கள் சிந்தித்து பார் கின்ற அளவிற்கு உங்களுடைய பேச்சுக்கள் இருக்க வேண்டும். மற்றவர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு தமிழ் பற்றுடன் இருத் தல் வேண்டும். மாணவர்கள் பேச்சுப் போட்டி களில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் அதிகளவில் நூலகங்களுக்கு சென்று நல்ல புத்தகங்களையெல்லாம் சேகரித்து படிக்க வேண்டும். தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனைத்து தக வல்களும் நொடிப்பொழுதில் பார்க்க முடி கிறது.  தொன்மையும், பெருமையும் மிக்க தமிழ கம் மகத்தான வாழ்வியலை வழங்கி வந்துள் ளது. நமது மகத்தான வாழ்வியல் பண்பாட் டினை நம் வெற்றிகள் சாதனைகள் மூலம் உல குக்கு  எடுத்து செல்ல வேண்டும் என தெரி வித்தார். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா ளர் பவன்குமார், ஜி.கிரியப்பனவர், துணை  மேயர் ரா.பாலசுப்பிரமணியன், செயின்ட்  ஜோசப் மகளிர் கல்லூரி செயலர் அ.குழந்தை  தெரஸ், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கே. கோபிநாத் மற்றும் கல்லூரி மாணவ, மாணவி யர்கள் பலர் கலந்து கொண்டனர்.