districts

img

காங்கேயத்தில் மாநில அளவிலான யோகா போட்டி

திருப்பூர், ஜூலை 31 - அகில இந்திய யோகா ஆசான்கள் சங்கத் தின் 11ஆவது மாநில அளவிலான யோகா போட்டி, காங்கயம் முன்னாள் எம்.எல்.ஏ. என். எஸ்.என். நடராஜ் தலைமையில் நடைபெற் றது. யோகா போட்டியை தாராபுரம் வரவை  ஆதீனம் மௌன சிவாசல அடிகள் குத்து  விளக்கேற்றி தொடங்கி வைத்தார். காங்கே யம் சித்தர்கள் வழி யோகா இயற்கை நல்வாழ் வகத்தின் யோகா ஆசான் காளியப்பன் முன் னிலை வகித்தார். அகில இந் திய யோகா ஆசான்கள் சங்கத் தின் பொதுச் செயலாளர்  கருப்பசாமி வரவேற்றார். சங் கப்பொருளாளர் லோகநாதன்  தொகுத்துக் கூறினார். சிறுவர்  பிரிவில் ஜெ.தருண், சிறுமியர்  பிரிவில் வி.ஜி.திருலோச்சனா  ஆகியோர் சாம்பியன்களின்  சாம்பியன் பட்டம் பெற்றனர்.  சிறப்புப் பிரிவில் ஜெ.முகி லன், வி.ஜி.திருலோச்சனா சாம்பியன் பட் டம் பெற்றனர். தேர்வு செய்யப்பட்ட சிறந்த  யோகா வீரர்களும் வீராங்கனைகளும், அடுத்து நடைபெற உள்ள தேசிய யோகா  போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். வெற்றி  பெற்றோருக்கு பதக்கங்கள்,சுழல் கோப் பைகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. யோகி எஸ்..ராமு லட்சுமணன் நன்றி கூறி னர்.