உடுமலை, ஏப்.18- உடுமலையில் தமிழ்நாடு களரிப்பட்டு அசோசியேஷன் சார்பில், மாநில அளவி லான களரிப்போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு களரிப்பட்டு அசோசியேஷன் சார்பில், மாநில அளவிலான களரிப் போட் டிகள் உடுமலை தேஜஸ் மகாலில் நடை பெற்றது. இந்த போட்டியில் தமிழகம் முழுவ தும் மாவட்ட அளவில் தேர்வான 100 வீரர்கள் கலந்து கொண்டனர். ஆண், பெண் என தனித்தனியாக ஜூனியர், சப் ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் வாள் சண்டை, களரிபயிட்டு உள்ளிட்ட எட்டு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்கள் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டிகளை தமிழ்நாடு களரிபயட்டு அசோசியேசன் செயலாளர் வீரமணி, மடத் துக்குளம் வடிவேல் ஆகியோர் ஒருங்கிண ைத்தனர். விழாவில் பொள்ளாச்சி நாடாளு மன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் உள்ளிட் டோர் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.