சேலம், ஜன.5- ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்க வலியுறுத்தி சிஐடியு சேலம் உருக்காலை தொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் உருக்காலை நிறுவனத்தில் பணியாற்றும் தொழி லாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை முறையாக நடைபெறவில்லை. ஆகவே, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்த வேண்டும் என வலியு றுத்தி புதனன்று சிஐடியு சேலம் உருக்காலை தொழிற்சங்கத் தின் தலைமையில் தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதையொட்டி உருக்காலை முன்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் பி. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இதில் சிஐடியு சேலம் உருக்காலை தொழிற்சங்க பொதுச் செயலாளர் கே.பி.சுரேஷ் குமார், பொருளாளர் பாலாஜி, துணைப் பொதுச் செயலா ளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் சரவணன், சண்முகம், ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.