districts

img

ரயில்வே சுரங்கப்பாதை பணியை விரைந்து துவங்கிடு

கோவை, மார்ச் 14- கோவை கணபதி செக்கான் தோட்டம் - பாலன் நகர் பகுதியில்  ரயில்வே சுரங்கப் பாதை அமைக் காத ரயில்வே நிர்வாகத்தை  கண்டித்து, தண்டவாளத்தில் அமர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மற்றும் பொது மக்கள் ரயில் மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். கோவை கணபதி செக்கான் தோட்டம் - பாலன் நகர் இடையே அமைந்துள்ள ரயில்வே கேட்டை அகற்றி விட்டு பொதுமக்கள் சென்று வர சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 3 வருடங்களாக சுரங்கப் பணிகள் நடைபெறாமல் பாதியில் நிறுத்தப்பட்டது. ஒப்பந்ததாரர் பிரச் சனையால் சுரங்கப்பாதை கட்டு மான பணி நிறுத்தப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் சொல் லப்பட்டது. சுரங்கப் பாதை பணி களை விரைந்து முடிக்கக்கோரி ரயில்வே நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இந்நிலையில், ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கையினை கண்டித்து செக்கான் தோட் டம் - பாலன் நகர் பகுதியில்  உள்ள ரயில்வே தண்டவாளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னரும், பொதுமக்களும் ரயில்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனையடுத்து போராட் டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சி யின் தலைவர்களுடன் ரயில்வே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி னர்.  இதுகுறித்து அப்பகுதி மக்கள்  கூறுகையில், மார்க்சிஸ்ட் கட்சி  மற்றும் பொதுமக்கள் தரப்பில் பேசு கையில், ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் துவங்கி 3 ஆண்டுகளாக  பாதியிலேயே நிறுத்தப்பட்டுள் ளது. ரயில்வே அதிகாரிகளிடம்  முறையிட்டும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக  தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, ரயில்வே அதிகாரிகள் உட னடியாக தலையிட்டு இந்த பிரச் சனைக்கு தீர்வு காணவேண்டும். அதுவரை இந்த பகுதியிலிருந்து செல்ல மாட்டோம் என்றனர்.  இதுதொடர்பாக போலீசார் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல்  தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு  வந்த ரயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித் தனர். இதனையடுத்து, போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கி ருந்து கலைந்து சென்றனர். முன்னதாக, போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநா பன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் என்.ஆர் முருகேசன், வடக்கு நகரக்குழு செயலாளர் ஆர்.சுந்தரம், சிஐடியு ஆட்டோ தொழி லாளர் சங்க மாவட்டத் தலைவர் இரா.செல்வம் மற்றும் விஜயகு மார், நாராயண சாமி  உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளானோர் பங் கேற்றனர்.