திருப்பூர், ஏப்.16- திருப்பூர் அருகே முதலிபாளையம் ஊராட்சி சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் சே குவேரா சிலம்பம் பயிற்சி வகுப்பு தொடங் கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி காலை தொடங்கிய இந்த பயிற்சி வகுப்பில் சிலம்பப் பயிற்சி பயிற் றுநர் எம்.மதிவாணன் பங்கேற்ற சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஆரம்ப கட்ட பயிற்சி அளித்து வகுப்பை துவக்கி வைத்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தெற்கு ஒன்றிய செயலாளர் டி. உமாசங்கர், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றிய குழு உறுப்பினர்கள் மகேஷ், ஜானகி, பொன் னாபுரம் கிளைச் செயலாளர் ஏ.செல்வம், முன்னாள் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் மணி என்கிற முருகசாமி உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். ஒவ்வொரு வாரமும் இருநாட்கள் காலை நேரத்தில் இப்பயிற்சி அளிக்கப்படவுள்ளது.