கோவை, செப்.4- ஓணம் பண்டிகைக்கான விற் பனை குறைந்ததால், உற்பத்தி செய் யப்பட்ட நெகமம் காட்டன் சேலைகள் விற்பனை குறைந்து தேக்கம் அடைந் துள்ளது. கோவை மாவட்டம், நெகமம் மற் றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இவர்கள் தங்கள் வீடுக ளில் காட்டன் சேலைகளை உற்பத்தி செய்து வருகின்றனர். இங்கிருந்து வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங் கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக் கும் காட்டன் சேலைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோ றும் ஓணம் பண்டிகையையொட்டி, காட்டன் சேலைகள் உற்பத்தி செய் யப்பட்டு கேரளாவுக்கு அனுப்பி வைக் கப்படும். ஆனால், இந்த ஆண்டு காட் டன் சேலைகள் விற்பனை பெருமள வில் குறைந்துவிட்டது. இதன் காரண மாக கைத்தறி நெசவாளர்கள் கவ லையடைந்துள்ளனர். இதுகுறித்து கைத்தறி நெசவாளர்கள் கூறுகை யில், ஓணம் பண்டிகையையொட்டி நெகமம் காட்டன் சேலைகள் பிரத் யேகமாக தயாரித்து, கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும். குறிப்பாக திருவனந்தபுரம், கொச்சி, திருச்சூர் மற்றும் பாலக்காடு உள்ளிட்ட பகுதி களுக்கு அதிகளவில் அனுப்பி வைக் கப்படும். ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்தை விட குறைந்த அளவே வர்த்தகம் நடைபெற்றுள்ளது. ஏற்க னவே நூல் விலை ஏற்றம், கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வது உள்ளிட்ட பிரச்சனை களால் கைத்தறி நெசவுத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது விற்பனையும் குறைந்து வருவதால், வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது, என்றனர்.