சேலம் மாவட்டம், நங்கவள்ளியில் செப்.19 ஆம் தேதியன்று நடைபெற உள்ள சிறப்பு வேலை வாய்ப்பு முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தலைமையில் ஆட்சியரகத்தில் திங்களன்று நடைபெற்றது. இதில் அரசு அதி காரிகள் பலர் கலந்து கொண்டனர்.