districts

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு கொடநாடு எஸ்டேட்டில் சிறப்பு புலனாய்வுக் குழு ஆய்வு

உதகை,மார்ச் 7- சிபிசிஐடி உதவி ஆய்வாளர் தலை மையிலான பதினைந்து பேர் கொண்ட  சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் தட யவியல் நிபுணர்கள் கொடநாடு எஸ் டேட்டில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட் டில் கடந்த 2017 ஆம் ஆண்டு காவ லாளி ஓம்பகதூர்  கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இச் சம்பவம் தொடர்பாக மறைந்த முன் னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார்  ஓட்டுநர் விபத்தில் இறந்த கனகராஜ் உட்பட  கேரளாவை சேர்ந்த குற்றவாளி களாக சேர்க்கப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ் உட்பட 11 பேர்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள் ளது. இது உதகை மாவட்ட அமர்வு  நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த பிப் மாதம்  23 ஆம் தேதி இவ்வழக்கு விசார ணைக்கு வந்தபோது, முன்பு நடை பெற்ற விசாரணையில் எதிரி தரப்பு வழக் கறிஞர் மூலம் சம்பவம் நடைபெற்ற இடத்தில் தற்போது பல்வேறு மாற்றங் கள் ஏற்பட்டுள்ளன எனவும், இச்சம்ப வம் நடைபெற்ற இடத்தை மீண்டும் ஆய்வு மேற்கொள்ள மனு அளிக்கப் பட்டது. இதன் அடிப்படையில் அரசு தரப்பு  இது சம்மந்தமாக விளக்கம் அளிக்க  வேண்டும் என நீதிமன்ற உத்தரவிட்டி ருந்த நிலையில், இவ்வழக்கின் கடந்த விசாரணையின் போது அரசு  தரப்பு மூலம் அளிக்கப்பட்ட பதில் மனு  ஏற்கப்பட்டு அதன் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து சம்ப வம் நடைபெற்ற இடத்தை ஆய்வு  செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டி ருந்தது. இதனை தொடர்ந்து வியாழனன்று சிபிசிஐடி உதவி ஆய்வாளர் தலைமை யிலான சிறப்பு குழு மற்றும் தடயவி யல் நிபுணர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், சம்பவ இடத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது என முழு மையாக ஆய்வு மேற்கொண்டு வரு கின்றனர்.  மேலும் வெள்ளியன்று (இன்று) நடைபெறும் விசாரணையின் போது  இந்த ஆய்வு குறித்து விளக்கம் அளிக் கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படு கிறது.