districts

img

திமுக சார்பில் கோவைக்கென பிரத்தியேக தேர்தல் அறிக்கை

கோவை, ஏப்.16- திமுக சார்பில் கோவைக்கென பிரத்தியேக தேர்தல் அறிக்கையை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, வேட்பா ளர் கணபதி பா.ராஜ்குமார் ஆகி யோர் வெளியிட்டனர்.  கோவை, பீளமேடு பகுதியில் உள்ள திமுக தேர்தல் பணிமனை யில், கோவைக்கான தேர்தல் அறிக் கையை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செவ்வாயன்று வெளியிட்டார். அதில் கோவையில் உள்ள நீர் நிலைகளில் மாசு ஏற்படுவது தடுக்கப்படும், சர்வ தேச தரத்திலான கிரிக்கெட் மைதா னம் அமைக்கப்படும், கோவை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்,  சிறுவாணி, பில்லூர் அணைகள் தூர் வார நடவடிக்கை எடுக்கப்படும், குறுந் தொழில்களுக்கு புதிய தொழில் பூங்கா அமைக்கப்படும், ஜிஎஸ்டி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும், நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை  எடுக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதி கள் அளிக்கப்பட்டுள்ளன.  இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் தேர்தல் அல்ல. அது ஒரு போர். இந்த போரில் மகத்தான வெற்றி பெறுவோம். திமுகவின் அற் புதமான களப்பணியால் கணபதி ராஜ்குமாரின் வெற்றி உறுதியாகி உள்ளது. பல்வேறு மக்களின் கருத்து கேட்டு திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. கோவைக்காக தனித்துவமான தேவைகள் மற்றும் மக்களிடம் இருந்து வந்த கோரிக்கை களை வைத்து கோவைக்கு என தேர் தல் அறிக்கை தயாரித்துள்ளோம். திமுக தேர்தல் அறிக்கை மீது மக்க ளுக்கு முழு நம்பிக்கை உள்ளது. 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற் றிய அரசு திமுக அரசு. அமைய உள்ள ஒன்றிய அரசிலும் திமுகவின் பங்கு  இருக்கும். ஒன்றியத்தில் ஆட்சி மாற் றத்திற்கான அறிகுறிகள் தெரிகின் றன. அடுத்தகட்ட பிரமாண்டமான வளர்ச்சியை கொண்டு வர வேண் டும் என தேர்தல் அறிக்கையை வெளி யிடுகிறோம். அடுத்தகட்ட பரிமாணத் திற்கான அடித்தளமிடுகிறோம். சிறு, குறு தொழில்களுக்கு ஜிஎஸ்டியால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  பாஜக ஆட்சிக்கு வந்து 3500 நாட் களுக்கு மேலாகி விட்டது. இத்தனை நாட்களில் செய்யாததை 500 நாட்க ளில் செய்வோம் என்பது எந்த வகை யில் நியாயம்? இப்படி சொல்ல பாஜக விற்கு தகுதியில்லை. பாஜக சொன் னதை செய்ததாக சரித்திரம் இல்லை.  எங்களுக்கு போட்டி அதிமுக உடன் தான். அதனை ஊடகங்கள் மறைக் கின்றன. கருத்துக் கணிப்புகளை பார்த்தால் சிரிப்பு வருகிறது. தமிழகத் தில் மட்டுமல்ல நாடு முழுவதும் இந்தியா கூட்டணியின் வெற்றி உறுதி யாகி இருக்கிறது. எனவே, பாஜக கலக்கமடைந்துள்ளது. தற்போது, தில்லியில் உள்துறை அமைச்சகத் தின் அலுவலகத்தில் தீவிபத்து ஏற் பட்டு ஆவணங்கள் எரிந்துள்ளதாக செய்தி வருகிறது. இதில் இருந்தே புரிந்து கொள்ள முடியும் மோடி அரசு தோல்வி அடையப்போகிறது என் பதை. கோவையில் கணபதி ராஜ் குமார் மகத்தான வெற்றி பெறுவார் என்றார்.  இந்த நிகழ்வின்போது வேட்பா ளர் கணபதி ராஜ்குமார், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச்  செயலாளர் மகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.