districts

img

கோவை மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் சிறப்பு தேர்தல் பேரவைக் கூட்டம்

கோவை, ஏப்.7- கோவை,பொள்ளாச்சி மற்றும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பா ளர்களை ஆதரித்து கோவை மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் சிறப்பு தேர்தல் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. கோவை காட்டூர் பகுதியில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி அலுவ லகத்தில், கோவை மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஞாயி றன்று சிறப்பு தேர்தல் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த  பேரவைக் கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள 10  சட்டமன்ற தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர் கள் கணபதி ராஜ்குமார், ஆ.ராசா, ஈஸ்வரசாமி ஆகியோ ருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வது என தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்திற்கு எல்.பி.எப்  சங்க நிர்வாகி ஆனந்த் தலைமை வகித்தார். சிஐடியு  மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றி னார். ஐ.என்.டி.யு.சி நிர்வாகி கருப்புசாமி, ஏ.ஐ.டி.யு.சி நிர் வாகி தங்கவேலு, ஹெச்.எம்.எஸ் தொழிற்சங்க நிர்வாகி ராஜாமணி, எல்.டி.யு.சி நிர்வாகி ஜெயபிரகாஷ், மின்வா ரிய கூட்டமைப்பு நிர்வாகி கோபால், விவசாயக் கூட்டமைப்பு  நிர்வாகிகள் காளப்பன், எம்.எல்.எப் நிர்வாகி தியாகராஜன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.