districts

img

மாணவர்களுக்கு சிறப்பு முகாம்

திருப்பூர், மார்ச் 15- திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்ப ணித் திட்டம் அலகு -2 சார்பாக கருமாபாளையம் கிராமத்தில்  ஏழு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 2 முகாமில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. கருமாபாளையம் பால் உற் பத்தி கூட்டுறவு சங்க செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்து துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கால்நடை  மருத்துவர்கள் கோபால், லோகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில், மாணவ, மாணவிக ளுக்கு தேனி வளர்ப்பு பயிற்சி பட்டறை அளிக்கப்பட்டது. இம் முகாமில் சிறப்பு விருந்தினராக தேசிய தேனீக்கள் வாரிய  உறுப்பினர் மஞ்சுளா மற்றும்  ஜவஹர் ராஜா ஆகியோர் கலந்து  கொண்டு மாணவ, மாணவிகளுக்கு தேனீக்களை வளர்க்கும்  முறைகள், சந்தைபடுத்துதல் போன்ற பயிற்சியிகளை அளித் தனர்.