districts

img

திருப்பூரில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருப்பூர், டிச.12-  திருப்பூரிலிருந்து மதுரை, சேலம், திருச்சி மார்க்கமாக 50 பேருந்துகள் உட்பட பெங்கல் பண்டிகையை முன்னிட்டு  260 சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படவுள்ளது.  பொங்கல் பண்டிகை முன்னிட்டு வியாழனன்று (ஜன.13)  முதல் வரும் 16 ஆம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்பட் டுள்ளது. இந்நிலையில், வெளி மாவட்டத்தினர் அவரவர் சொந்த ஊர் செல்ல வசதியாக திருப்பூர் புதிய பேருந்து  நிலையம், கோவில்வழி, யுனிவர்சல் தியேட்டர் பேருந்து  நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படு கிறது. அதிகபட்சமாக மதுரைக்கு 80 பேருந்துகளும், சேலம், திருச்சி மார்க்கமாக 50 பேருந்துகளும் என  260 சிறப்பு பேருந் துகள் இயக்கப்படுகிறது.  பேருந்து இயக்கத்தை கண்காணிக்க பேருந்து நிலையத் திற்கு  நான்கு கண்காணிப்பு மற்றும் இயக்க குழு வீதம் 12  குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த குழு பேருந்து கள் புறப்படும் நேரம், ஒட்டுநர், நடத்துனர் செயல்பாடுகள் குறித்து இவர்கள் கண்காணிப்பார்கள். ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் பயணிகள் புகார் தெரிவிக்க தகவல் மைய மும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.