நாமக்கல், ஆக.3- கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, நடைபெற்ற தென்னிந்திய அளவிலான வில்வித்தை போட்டி யில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட னர். கொல்லிமலையை ஆண்ட கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனுக்கு ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கின் போது அரசின் சார்பில் விழா நடத்தப்படும். அதன் படி, நடப்பாண்டில் வல்வில் ஓரி விழா புதனன்று மலர் கண் காட்சியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து வியாழனன்று வல்வில் ஓரி மன்னனின் ஆற்றலை போற்றும் விதமாக தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் நாமக்கல் மாவட்ட வில்வித்தை சங்கத்தின் சார்பில் தென்னிந்திய அளவி லான வில்வித்தை போட்டிகள் நடைபெற்றது. கொல்லிமலை செம்மேடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இப்போட் டியை மாவட்ட ஆட்சியர் ச.உமா, சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி ஆகியோர் தொடங்கி வைத்த னர். இந்தியன், ரிக்கர்வ், காம்பவுண்ட் என 3 பிரிவுகளில் 8, 10, 12, 14, 17, 19 வயதுக்குட்பட்டோர் 19 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழ்நாடு, ஆந் திரா, புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்க ளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங் கேற்றனர். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்கள் மற்றும் வல்வில் ஓரி கோப்பை, ரொக்க பணம் உள்ளிட்டவைகள் வழங்கப்படு கிறது. இவ்விழாவில் அட்மா குழு தலைவர் செந்தில் முருகன், கோட்டாட்சியர் சரவணன், வட்டாட்சியர் அப்பன் ராஜ், நாமக் கல் மாவட்ட வில்வித்தை சங்க தலைவர் கேசவன் உட்பட அரசு அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.