districts

img

நீலகிரி மாவட்டம், கூடலூர் 20 ஆவது வார்டின் குடி தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு

நீலகிரி மாவட்டம், கூடலூர் 20 ஆவது வார்டின் குடி தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வுகாணக் கோரி, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, கடந்த புதன்கிழமையன்று உள்ளாட்சி துறை அமைச்சர் நேருவை அவரது இல்லத்தில் சந்தித்து மனு அளித்தார். மனுவை பரிசீலித்த அமைச்சர், நகராட்சி நிர்வாக ஆணையருக்கு தொடர்பு கொண்டு பேசி உடனடி நடவடிக்கை எடுக்கும் படி அறிவுறுத்தினார். அதன் தொடர்ச்சியாக, நீலகிரி - கூடலூர் நில பிரச்சனை தொடர்பாக, நில நிர்வாக ஆணையரை நேரில் சந்தித்தும் மனு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில், நீலகிரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.வாசு உடனிருந்தார்.