திருப்பூர், மார்ச் 15- 63 வேலம்பாளையம் மற்றும் பூமலூர் ஊராட்சிகளில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி உயர் மட்ட மின் விளக்குகளை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். பல்லடம் சட்டமன்ற தொகுதி 63 வேலம்பாளையம் மற்றும் பூமலூர் ஊராட்சிகளில் இரண்டு சூரிய ஒளி உயர் மட்ட மின் விளக்குகள், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள் ளது. சூரிய ஒளி உயர்மட்ட விளக்குகளை வியாழனன்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், பல்லடம் ஒன்றிய செயலாளர் ஆர்.பரமசிவம், 63 வேலம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் நடராஜ், பூமலூர் ஊராட்சி மன்றத் தலைவர் பிரியங்கா மற்றும் மன்ற உறுப்பினர்கள், பல்லடம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ், ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் ஈஸ்வரி, பாலசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.