districts

img

உள்ளாட்சி நிர்வாகத்தில் சமூக நீதி திருப்பூரில் பயிற்சி முகாம்

திருப்பூர், நவ.16 -  உள்ளாட்சி நிர்வாகத்தில் சமூகநீதி குறித்து தலித் ஊராட்சி  மன்றத் தலைவர்களுக்கு திருப்பூரில் பயிற்சி முகாம் நடை பெற்றது.  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர்  மாவட்டக் குழு சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  தலித் ஊராட்சித் தலைவர்களுக்கு, *உள்ளாட்சி நிர்வா கத்தில் சமூகநீதி* பயிற்சி முகாம்  புதன்கிழமையன்று திருப்பூர்  குமரன் சாலை அரிமா சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது. இம்முகாமுக்கு மாவட்டத் தலைவர் ச.நந்தகோபால் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஏ.பஞ்ச லிங்கம் வரவேற்றார். மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்  யு.கே.சிவஞானம் தொடங்கி வைத்துப் பேசினார். 73 ஆவது  சட்டத் திருத்தம் - தமிழ்நாடு உள்ளாட்சிகள் சட்டம் - 1994  - கிராமசபை முக்கிய அம்சங்கள் என்ற தலைப்பில் மாநிலக் குழு உறுப்பினர் கா.வேணி, கிராம ஊராட்சிகளுக்கான திட்டங்களும் - நிதி ஒதுக்கீடுகளும் என்ற தலைப்பில், கொள்கை மற்றும் சட்டத் தலையீடு அமைப்பின் எம்.எல்.தாஸ்,  தலித் / பழங்குடி ஊராட்சித் தலைவர்கள் மீதான பாகு பாடுகளும் - தடுப்பதற்கான சட்ட வழிமுறைகளும் என்ற தலைப்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு ஆகியோர் கருத்துரை வழங் கினர். அதன்மீது, முகாமில் கலந்து கொண்ட ஊராட்சித் தலை வர்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். பயிற்சி முகாமின் கோரிக்கைகள் - தீர்மானங்கள் குறித்து மாவட்டச்  செயலாளர் சி.கே.கனகராஜ் விளக்கினார். தலைவர்களுக்கு நினைவுப் பரிசினை மாவட்டத் துணைத்  தலைவர் செல்லமுத்து வழங்கினார். நிறைவாக, மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.பழனிச்சாமி நன்றி கூறினார்.