பள்ளிபாளையம், டிச.30- பள்ளிபாளையம் பகுதியில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை பேரூராட்சி, ஆயில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மெட்டாலா, மங்களபுரம், தண்ணீர் பந்தல் பாளையம் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் வெள்ளியன்று காலை வழக்கத்தை காட்டிலும் அதிக பனிமூட்டமாக காணப்பட்டது. இதன் காரண மாக ராசிபுரம்-ஆத்தூர் பிரதான சாலையில், எதிரே வரும் வாக னங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இதனால் பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றன. மார்கழி மாதம் என்பதால் தொடர்ந்து ஒரு சில தினங்களாக பனிமூட்டம் காணப்படுகிறது. மேலும், காலை 9 மணி வரை பனிப்பொழிவு அதிகரித்து, 10 மணிக்கு பிறகு நிலைமை சீரடைகிறது.