சேலம், ஜன.20- காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் பள்ளிக்கு மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதாக சேலத்தில், மாநில சமூக நலத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் பெருமிதம் தெரிவித்துள்ளார். சேலம், மணக்காடு மாநக ராட்சி துவக்கப்பள்ளியில் மாநில சமூக நலன் மற்றும் மகளிர் உரி மைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் காலை உணவுத் திட்டத் தின் செயல்பாடுகள் குறித்து வெள்ளியன்று, நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதன் பின் அமைச்சர் பி.கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சேலம் மாநகராட்சியில் உள்ள 54 பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. இதன்மூலம் 5 ஆயிரத்து 447 மாணாக்கர்கள் பயன்பெற்று வரு கின்றனர். இத்திட்டத்தின் மூலம் பள்ளிக்கு வரும் குழந்தைகள் காலை உணவினை குறித்த நேரத் தில் சாப்பிடுவதால் குழந்தைகளின் ஊட்டச்சத்து அதிகரித்து குறை பாடில்லாத நிலை உருவாக்கப் பட்டு வருகிறது. மேலும், பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக் கையும் அதிகரித்து வருகிறது. இத் திட்டத்திற்குத் தேவையான உணவுப்பொருட்களின் இருப்பு குறித்தும், குழந்தைகளின் விவ ரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் நேரடியாக கண்கா ணிக்கப்பட்டு வருகிறது. தற்போது நடந்து முடிந்த சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடரில் 2023 – 24 நிதியாண்டில் காலை உணவுத் திட்டம் அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார், என் றார். முன்னதாக, இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம், மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன், துணை மேயர் மா.சாரதாதேவி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ரா.இராஜேந் திரன், மாநகராட்சி ஆணையர் தா.கிறிஸ்துராஜ், சேலம் கோட் டாட்சியர் சி.விஷ்ணுவர்த்தினி மற்றும் உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள் கலந்து கொண் டனர்.