தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி சேலம் மாவட்டம், ஆத்தூர் மின்வாரிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சியின் தாலுகாச் செயலாளர் ஏ.முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மின்வாரிய செயற்பொறியாளரிடம் மனு அளிக்கப்பட்டது.