கோவை, நவ.17- அனைத்து மாவட்டங்களிலும் சிறிய ஜவுளி பூங்கா அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளதாக, தமிழக கைத் தறி மற்றும் துணிநூல் துறை அமைச் சர் காந்தி தெரிவித்தார். கோவை தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை, மத்திய அரசின் ஜவுளித் துறை மற் றும் இந்திய தொழில் கூட்ட மைப்பு(CII) ஆகியவை இணைந்து நடத்தும் தொழில்நுட்ப ஜவுளி கருத் தரங்கம் வெள்ளியன்று துவங்கி யது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி பங்கேற்றார். இதனைதொடர்ந்து செய்தியா ளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் காந்தி, முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றவுடன், ஜவுளித் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். 10 ஆண்டுகள் இல்லாத வகையில் கடந்தாண்டு சென்னை யில் தொழில்நுட்ப ஜவுளி கருத்த ரங்கம் நடத்தியுள்ளார். அடுத்து கோவையில் நடத்த பரிந்துரை செய் தார். அனைத்து மாவட்டங்களிலும் சிறிய ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. ரூபாய் 2.5 கோடி மதிப் பில் ஒரே இடத்தில் 3 தொழிற் கூடங் கள் அமைக்கும் வகையில் வசதி கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதில், 110 விண்ணப்பங்கள் வந் துள்ள நிலையில், 10 விண்ணப்பங்க ளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்றார். டிசம்பர் மாதத்திற்கு முன்னதா கவே, பொங்கலுக்கு தேவையான வேஷ்டி, சேலைகள் வருவாய் துறை யினரிடம் ஒப்படைக்க உள்ளோம். சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்கப் பட்டுள்ளது. மாநில அரசின் புதிய ஜவுளி கொள்கையில் 50 கோடி கீழ் உள்ள செயற்கை நூலிழை தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்யப் படும் என்றார்.