உதகை, ஜன. 31- பசுந்தேயிலை கிலோ வுக்கு ரூ.35 வழங்க வேண் டும் என வலியுறுத்தி, உதகை யில் சிறு தேயிலை விவசாயி கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கும் பசுந்தேயிலைக்கு போதுமான விலை கிடைக் காததால் தேயிலை விவசாயிகள் அவதிக் குள்ளாகின்றனர். இதனால், பசுந்தேலை கிலோவுக்கு ரூ.35 நிர்ணயம் செய்யக்கோரி பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில், பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.35 வழங்க வேண்டும், யானை, சிறுத்தை, உள்ளிட்ட வன விலங்கு களிடமிருந்து விவசாய நிலங்களையும், விவசாயிகளையும் காப்பாற்ற கோரி சிறு தேயிலை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உதகை ஏடிசி சுந்திர திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிறு தேயிலை விவ சாயிகள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கி ணைப்பாளர் ஜே.பி.சுப்ரமணியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் படுக தேச பார்ட்டி ஒருங்கிணைப்பாளர் மஞ்சை வி.மோ கன், எடக்காடு ஊர் தலைவர் கணபதி, அறை யட்டி ஆனந்தன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பசுந்தேயிலைக்கு உரிய விலை அளிக்கவும், மானியம் அளிக் கவும், எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை அமல்படுத்தும் வலியுறுத்தி விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண் கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.