districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

3 கிலோ தங்கத்தை ஏமாற்றியவர்கள் மீது வழக்கு

கோவை, செப்.8- மும்பையை சேர்ந்தவரிடம் 3 கிலோ தங்கம் ஏமாற்றிய நகை  கடைக்காரர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய் துள்ளனர். கோவை, உக்கடம்  பகுதியை சேர்ந்தவர் முன்னா பட்டேல்  (46), நியாஸ் மாலிக் (42), மாசின் மாலிக் (40), ஜெய்ரூல் மாலிக்  (44). இவர்கள் மும்பையில் நகைக்கடை மற்றும் நகை பட்டறை நடத்தி வருகின்றனர். இவர்களது கடைக்கு மும் பையை சேர்ந்த உத்தாம்சாவ் (44) என்ற தங்க நகை வியாபாரி  சிறிது சிறிதாக 8 கிலோ நகையை அளித்து சுத்தமான தங்க மாக மாற்றி கொடுக்க கூறியுள்ளார். இதில், 5 கிலோ தங்கத்தை  மற்றும் திருப்பி அளித்து விட்டு 3 கிலோ தங்கத்தை திருப்பி  தராமல் இருந்து உள்ளனர்.  இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் கோவை, செல்வபுரம்  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீ சார் நகையை திரும்ப ஒப்படைக்காத 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை 10ஆண்டு சிறை தண்டனை

உதகை, செப்.8- சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஜவுளிக் கடை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து ஊட்டி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூரை சேர்ந்தவர் குமாரவேல் (39).  இவர் ஜவுளிக்கடை மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வரு கிறார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்தநிலையில், கூடலூர் பகுதியைச் சேர்ந்த தாயை  இழந்த 17 வயது சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து வெளியில் கூறக்கூடாது என மிரட்டல் விடுத்துள்ளார். தொடர்ச்சியாக அவர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததால் சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் விசாரணை நடத்தி கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இதன்பேரில் காவல் ஆய்வாளர் சுசிலா தலைமை யிலான போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, குமாரவேலை கைது செய்தனர். இதன் பின்னர் அவர்  பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசா ரணை ஊட்டி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில், வழக்கில் தீர்ப்பு புதனன்று கூறப்பட்டது. இதன்படி, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட குமாரவேலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து  நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில்  வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார்.

மாணவர் தற்கொலை

கோவை, செப்.8-  வளாக நேர்முக தேர்வில், தோல்வியால் மாணவர் தற் கொலை செய்து கொண்டார். கோவை, போத்தனூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மகன் பிரவீன் (21). இவர் சரவணம் பட்டி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ 4ஆம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் நடை பெற்ற கேம்பஸ் இன்டர்வியூவில் இவருக்கு வேலை கிடைக்க வில்லை என தெரிகிறது. இதனால் மிகுந்த மன அழுத்தத்தில்  இருந்த பிரவீன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார்.  இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்  பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை

கோவை, செப்.8- கோவை குறிச்சி குளத்தில் தீயணைப்புத்துறை சார்பில்  பேரிடர் கால மீட்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து  வருகிறது. இந்நிலையில், வெள்ளம் வரக்கூடிய பகுதிகள்  மற்றும் மழைநீர் தேங்கி நிற்கும் பகுதிகள், நீர்நிலைகள்  இருக்கும் பகுதிகளில் அவ்வப்போது தீயணைப்புத் துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.  அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கில் தீயணைப்புத்துறை சார்பில் அவ்வப்போது பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஆறுகள், குளங்கள் உள் ளிட்ட நீர்நிலைகளில் தீயணைப்புத்துறை வீரர்கள் பாது காப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கோவை மாவட்டம், குறிச்சி குளத்தில் வட கிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளி யன்று காலை நடைபெற்றது. கோவை தெற்கு தீய ணைப்பு நிலையத்தின் சார்பில், உதவி மாவட்ட தீய ணைப்பு அலுவலர் அழகர்சாமி தலைமையில் இந்த ஒத்திகை  நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல் சூலூர் பெரியகுளத் திலும் தீயணைப்புத் துறையினர் பேரிடர் மீட்பு பயிற்சி மேற்கொண்டனர்.

எழுத்தாளர் பால் ஹாக்கிங்ஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்

உதகை, செப்.8- படுகர் சமூகம் குறித்து இழிவுபடுத்தி எழுதிய, எழுத்தாளர் பால் ஹாக்கிங்ஸ் தனது, கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என படுகர் அமைப்புகளின் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.   நீலகிரி மாவட்டம், படுக சமுதாய அமைப்புகளின் கூட்டமைப்பு கூட்டம் உதகையில் ஒருங்கிணைப்பாளர் மஞ்சை வி.மோகன் தலைமை வகித்தார். ஜே.பி.சுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.  கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மஞ்சை வி.மோகன் கூறுகையில், ‘பால் ஹாக்கிங்ஸ் எழுதிய புத்தகத்தில், படுக சமுதாய மக்கள் குறித்து கற்பனையான மற்றும் இழிவுப்படுத்தும் கட்டுரை உள்ளது. பால் ஹாக்கிங்ஸ் நீலகிரி மாவட்டத்துக்கு வந்ததிலிருந்து, நீலகிரியின் மிகப் பெரிய பழங்குடியினக் குழுவான படுகர்களின் வரலாற்றைப் பற்றி ஆதாரமற்ற கூற்றுக்களைச் கூறி வருகிறார்.  அவர் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், படுகர்களின் தோற்றம் மற்றும் பிறப்பைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளது. எனவே, அவர் எழுதியுள்ள புத்தகம் வெளியிடப்படுவதைத் தடுக்க வேண்டும். மேலும், அவர் படுக சமுதாயம் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவர் மீது வழக்கு தொடரப்படும்’ என்றார்.

குந்தகம் விளைவிக்கும் சுவரொட்டி காவல்துறை எச்சரிக்கை

கோவை, செப்.8- சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளை விக்கும் வகையில் ஆட்சேபகரமான கருத் துக்கள் இருக்கும் சுவரொட்டி இருக்கும் பொறுப்பாளர்கள் மற்றும் அச்சக உரிமை யாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக் கப்படும் என கோவை மாநகர காவல் துறை  எச்சரித்துள்ளது.  கோவை மாநகர் பகுதிகளில் அரசியல்  கட்சிகள், மதம் மற்றும் இதர அமைப்புகள் சார்பாக சுவரொட்டிகளும், போட்டி சுவ ரொட்டிகளும் ஒட்டப்பட்டு வருகின்றன. குறிப் பாக, ஒரு கட்சி அல்லது அமைப்பைச் சேர்ந்த வர்கள் மற்றொரு கட்சி அல்லது அமைப்புகள்  மீது கருத்துக்களுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டி வருகின்றனர்.  எனவே, சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், ஆட்சேப கரமான கருத்துக்கள் இருக்கும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என  காவல்துறை எச்சரித்து உள்ளது. மேலும் ஆட்சேபகரமான அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகை யில் உள்ள கருத்துகளுடன் கூடிய வாச கங்கள் அல்லது சித்திரங்களுடன் கூடிய சுவரொட்டியை அச்சிடுவதற்கு எவரேனும் தங்களை அணுகினால், அதுகுறித்து சம் பந்தப்பட்ட அச்சக உரிமையாளர் மற்றும் பொறுப்பாளர் உடனடியாக அவர்களது பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்க  வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். மேலும், கோவை மாநகரில் அச்சடிக் கப்படும் சுவரொட்டிகள் அனைத்திலும் சம்மந்தப்பட்ட அச்சகத்தின் பெயர் மற்றும்  உரிமம் எண் ஆகியவற்றை தெளிவாக குறிப் பிட வேண்டும் எனவும் அவ்வாறு குறிப்பிடப் படாத அச்சகத்தின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது. 

சாலையில் வாகனத்தை நிறுத்தி உறங்கியதால் மாணவர்கள் பரிதவிப்பு

போதையில் பள்ளி வாகனத்தை இயக்கிய ஓட்டுநர்

கோவை, செப்.8- மது போதையில் பள்ளி வாகனத்தை ஓட்டுநர் சாலையில் நிறுத்தி தூங்கியதால்,  வாகனத்திற்குள் இருந்த பள்ளி மாணவர்கள்  பரிதவிப்புக்குள்ளாகினர். கோவைபுதூர் பகுதியில் இயங்கி வரும்  தனியார்  பள்ளியில் (சி.எஸ்.அகாடமி) ஆயி ரக்கணக்கான குழந்தைகள் படித்து வரு கின்றனர். இங்கு பயிலும் குழந்தைகள் பள்ளி யின் வாகனத்தில் வந்து செல்கின்றன. இந்நிலையில், வடவள்ளியில் இருந்து பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த வாகனம்,  குருசாமி நகர் பகுதியில் சாலையில் நின் றுள்ளது. இதில், மாணவர்கள் இருப்பதை சக வாகன ஓட்டிகள் சென்று பார்த்தபோது, ஓட்டுநர் தூங்கி கொண்டிருந்தார். இது குறித்து விசாரித்தபோது, ஓட்டுநரின் பெயர் செந்தில் என்பதும், மது போதையில் வாக னத்தை ஓட்ட முடியாமல் தத்தளித்து ஸ்டேரிங்  மீது படுத்து தூங்கியது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அறிந்த பெற் றோர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். உடனடியாக பள்ளிக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. தொடர்ந்து மாற்று வாகனம் ஏற் பாடு செய்யப்பட்டு 12 குழந்தைகள் பள்ளிக்கு  அழைத்துச் செல்லப்பட்டனர். மது போதையில் வாகனத்தை இயக்கிய  ஓட்டுநர் செந்தில் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள்  கோரிக்கை விடுத்தனர். இதன் பேரில், ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து வாக னத்தை பறிமுதல் செய்தனர்.

நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு வாத்தியம் இசைத்து மலர் தூவி வரவேற்பு

திருப்பூர், செப்.8– திருப்பூர் மாவட்டத்தில் ஜெய்வாபாய் பள்ளி  தலைமை ஆசிரியை உள்ளிட்ட 11 ஆசிரியர்கள் டாக்டர்  ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.  சென்னையில் நடந்த விழாவில் பள்ளி கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைவருக் கும் விருது வழங்கினார்.  இதனையடுத்து சென்னையில் இருந்து திருப்பூர்  திரும்பிய ஜெய்வாபாய் மாநகராட்சி மாதிரி பெண்கள்  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை ஸ்டெல்லா அம லோற்பவ மேரிக்கு பள்ளி நிர்வாகம், அலுவலக பணியா ளர்கள், மாணவிகள், பெற்றோர்கள், பள்ளி மேலாண் மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கம், முன்னாள்  மாணவிகள் சங்கம் சார்பில் சந்தன மாலை அணிவித்து  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.   இதைத் தொடர்ந்து ரயில் நிலையம் நிறுத்தத்தில்  இருந்து தலைமையாசிரியை ஸ்டெல்லா அமலோற்பவ  மேரி நடைபயணமாக அழைத்து வரப்பட்டார். அப்போது  சீருடை அணிந்த பள்ளி பேண்ட் வாத்திய குழு மாணவிகள்  பேண்ட் வாத்தியத்துடன், என்சி.சி, சாரணியர், பேட்ரோல்,  செஞ்சிலுவை சங்க மாணவிகளின் கம்பீர அணிவகுப்பு டன் இருபுறமும் பள்ளி மாணவிகள் நின்றுகொண்டு  தங்கள் தலைமையாசிரியைக்கு வாழ்த்து சொல்லி வர வேற்றனர். பின்னர் பள்ளி வளாகத்துக்குள் வெல்கம் என்று  ரோஜா பூக்களால் அமைக்கப்பட்டு இருந்த இடத்தில்  மாணவிகள் தலைமையாசிரியை மீது பூக்கள் தூவி வர வேற்றனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட பள்ளி தலைமை யாசிரியை ஸ்டெல்லா அமலோற்பவ மேரி நன்றி தெரி வித்து பேசுகையில்: இந்த விருது தனிப்பட்ட விருது அல்ல.  இது பள்ளிக்கு கிடைத்த அங்கீகாரம். இந்த விருது மூலம்  கிடைக்கப்பெறும் ரூ.10 ஆயிரத்தை பெற்றோர்கள் இல் லாமல் கஷ்டப்படும் மாணவிகளுக்காக பள்ளியில் செயல் படும் அறக்கட்டளைக்கு கொடுக்க உள்ளேன். இந்நிகழ்ச் சிக்கான ஏற்பாடுகளை பள்ளி மேலாண்மைக்குழு உறுப் பினர் முத்தமிழ் செல்வன் செய்து இருந்தார்.

சாலை விபத்தில் ஒருவர் பலி

அவிநாசி, செப்.8- அவிநாசி அருகே பெருமாநல்லூரில் இருசக்கர வாகன  விபத்தில் ஒருவர் வியாழனன்று உயிரிழந்தார். பெருமாநல்லூர் எஸ்எஸ் நகரைச் சேர்ந்த ஜனார்த்தனன்  மகன் சேதுராமன்(43), பெருமாநல்லூர் லட்சுமி கார்டன் பகுதி யைச் சேர்ந்த திருமூர்த்தி மகன் தாமோதரன்(37). இவர்கள்  இருவரும் வெவ்வேறு இருசக்கர வாகனத்தில் பெருமாநல் லூர் - திருப்பூர் சாலை பாரதி நகர் பிரிவு அருகே சென்று கொண் டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு இருசக் கர வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளானதில், இருவரும்  பலத்த காயமடைந்தனர். மேலும் பலத்த காயமடைந்த சேதுரா மன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பெருமா நல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின் றனர்.

வீட்டின் கதவை உடைத்து  10 பவுன் நகை   திருட்டு

அவிநாசி, செப்.8- அவிநாசி அருகே சின்னேரிபாளையத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளிருந்த 10 பவுன் தங்க நகையை திருடிச்  சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அவிநாசி அருகே சின்னேரிபாளையம் ருக்மா கார்டன் பகு தியில் வசித்து வருபவர் அழகேசன்(37). அவிநாசி முத்துச் செட்டிபாளையத்தில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகி றார். இந்நிலையில், இவர் தனது குடும்பத்துடன் கடந்த இரு  நாள்களுக்கு முன் வெளியூர் சென்றுள்ளார். வெள்ளிக்கி ழமை காலை வந்து பார்த்த போது, வீட்டின் முன் கதவு உடைத்து பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்கநகை, ரொக் கப்பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது  தெரியவந்தது. இது குறித்து அழகேசன் அளித்த புகாரின் பேரில், அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்க ளைத் தேடி வருகின்றனர்.

அடுத்தடுத்து இரண்டு வாகனங்கள் கவிழ்ந்து விபத்து

அவிநாசி, செப்.8- அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாக னங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எனினும் நல்வாய்ப் பாக இரு வாகனங்களில் பயணம் செய்தவர்கள் உயிர் தப்பி னர். கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த நாகராஜ் (38), பாலாஜி (47) ஆகியோர் கோவையில் இருந்து கோபி நோக்கி  காரில் சென்று கொண்டிருந்தனர். இதேபோல கோவை யில் இருந்து கிருஷ்ணகிரியை நோக்கி மாதேஷ் (26). அர விந்த் (24) ஆகியோர் சரக்கு வேனில் சென்று கொண்டி ருந்தனர். சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலை அவிநாசி ராயங்கோயில் பிரிவு அருகே வந்தபோது, எதிர்பாராத வித மாக சரக்கு வேன், கார் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்துக்குள் ளானது. இதில்  இரு வாகனங்களில் பயணம் செய்தவர்கள்  சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்தவர்கள் உட னடியாக மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது  குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அயோத்தி சாமியாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அவிநாசி, செப்.8- தமிழ் நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவிதித்த அயோத்தி சாமி யாரை கண்டித்து அவிநாசியில் ஆதி தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சனாதன தர்மம் பற்றி தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு, அயோத்தி சாமியார் பரமஹம் ஆச்சாரியார் உதயநிதி படத்தை கத்தியால் குத்தியும், இவர் தலைக்கு 10 கோடி  ரூபாய் தருவதாகவும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதை கண்டித்து ஆதி தமிழர் பேரவையினர் அவிநாசி புதிய  பேருந்து நிலையம் முன்பு சாமியாரின் உருவப்படத்தை கிழித் தெறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆதி தமிழர்  பேரவை நிர்வாகி விடுதலைச் செல்வன், மணி உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

கல்குவாரியில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

திருப்பூர், செப். 8 – திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் காரணம்பேட்டையில் எழில் ப்ளூமெட்டல் என்ற தனியார் கல்குவாரியில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். மாசு கட்டுப் பாட்டு வாரியம் சட்டவிரோதமாக அனுமதி  கொடுத்ததே இதற்குக் காரணம் என்று சட்டவி ரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தினர் குற் றஞ்சாட்டியுள்ளனர். காரணம்பேட்டை தனியார் கிரசரில் வெள் ளியன்று சிலிண்டர் வெடித்து ஒரு பணியாளர்  பலியானதுடன், சிலர் படுகாயம் அடைந்துள் ளதாக தகவல் கிடைத்துள்ளது. மாசு கட்டுப் பாட்டு வாரியம் சட்டவிரோத அனுமதி கொடுத்ததே இதுபோன்ற செயல்கள் நடப் பதற்கு மிக முக்கிய காரணமாக அமைகிறது.  இப்பகுதிகளில் தொடர்ந்து ஒவ்வொரு  மாதமும் இறப்பு சம்பவம் நிகழ்ந்து கொண்டே  இருக்கிறது. இதை உடனடியாக தடுத்து  நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி யாளர்களுக்கும் எவ்வித சட்டஉரிமை, சமூ கப் பாதுகாப்பு இல்லை. ஆகவே சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகள் அனைவரும் பதவி  விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள் ளது.

இளைஞர்களுக்கு நெசவு பயிற்சி


திருப்பூர், செப்.8– திருப்பூர் மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார் பில் இளைஞர்களுக்கு நெசவுப் பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் 45 நாட்கள் பயிற்சி அளித்து அவர்களை  நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து  வேலைவாய்ப்பு வழங்குதல் (அல்லது) தொழில் முனை வோர்களாக உருவாக்குதல்.  பாரம்பரியமான கைத்தறி தொழிலை அதனுடைய பழமை மாறாமல் புத்துயிரூட்டுவது. கிராமப்புறத்திலுள்ள இளைஞர்களும் கைத்தறி தொழிலை ஒரு தொழிலாக அவர்கள் பகுதியிலேயே ஆரம்பித்தல். வேலையில்லாத இளைஞர்களுக்கு நெசவுத் தொழில் தொடர்பாக குறுகியகால பயிற்சி அளித்தல் என முடிவு செய்யப்பட்டுள்ளது.  2023-24-ல் முதற்கட்டமாக 300 இளைஞர்களை இத் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் சேரும்  விண்ணப்பதாரர்களுக்கு  நாளொன்றுக்கு ரூ.250/- வீதம்  பயிற்சி காலம் முடிய ஊக்கத் தொகை வழங்கப்படும். 18 முதல்  35 வயது வரை கைத்தறிகளை இயக்குவதற்கு  தகுதி உள்ள வர்களாக  இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பயிற்சியில்  சேர விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.loom world.in இணைய தளத்தில் விண்ணப்பங்களை ஆன்லைன்   மூலம் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக செப்டம்பர் 23  அன்று சி.எச்.31. கோவில்வழி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு  சங்க வளாகத்தில் நடைபெறும் விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு வேலையில்லாத இளைஞர் / பெண்கள்  விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம்  என்று மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள் ளார்.

சமூக ஆர்வலருக்கு  கொலை மிரட்டல்

திருப்பூர், செப். 8 - திருப்பூரைச் சேர்ந்த  சமூக ஆர்வலர் கே.ஏ.கே.என் கிற பி.கிருஷ்ணசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்த தெற்கு காவல் நிலையத்தில் புகார் கூறப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகரம், வெள் ளியன்காடு, முத்தையன் கோவில், லே அவுட் 3 ஆவது  வீதியில் வசித்து வரும் சமூக  ஆர்வலர் கிருஷ்னசாமி என்பவருக்கு, வீடு புகுந்து கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டரீதியாக உரிய  நடவடிக்கை எடுக்க வேண் டும் என தெற்கு காவல் நிலை யத்தில் புகார் கூறப்பட்டுள் ளது.

திருப்பூரில் இன்று  தேசிய மக்கள் நீதிமன்றம்

திருப்பூர், செப்.8– தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின்  உத்தரவின் பேரில் திருப்பூரில் தேசிய  மக்கள் நீதிமன்றம்  செப்டம்பர் 9ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. இதன்  துவக்க விழா நிகழ்வு காலை 9.30 மணியளவில் மோட்டார்  வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிமன்ற வளாகத்தில், முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி ஸ்வர்ணம் ஜெ. நடராஜன் தலைமையில் நடைபெறுகிறது என சட்டப்பணி கள் குழு தெரிவித்துள்ளது.

கடன் தொல்லை: ரயில் முன்பு விழுந்து கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை

ஈரோடு, செப்.8- ஈரோட்டில் கடன் தொல்லையால் கிராம நிர்வாக அலுவ லர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்ப வம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள வெள்ளாள பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (35). இவர் பவானி  அருகே உள்ள ஒரிச்சேரி புதூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சுகன்யா. இந்த  தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ஒரு குழந்தை யும் இறந்துவிட்டது. இதனிடையே செந்தில்குமார் குடும்ப பிரச்சனை மற்றும் கடன் தொல்லையால் கடந்த சில மாதங்க ளாக மனவேதனையுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் தனது பெரியம்மாவின் மகளான ரம்யா வுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்தார். இதனால் பதற்றமடைந்த ரம்யா மீண்டும் அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது, செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ என்று வந்தது. இதனிடையே ஈரோட்டில் இருந்து தொட்டிபாளையம் நோக்கி செல்லும் ரயில்வே தண்டவாள பகுதியில் செந்தில் குமார் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழி யாக வந்த சதாப்தி விரைவு ரயில் முன்பு செந்தில்குமார் விழுந் துள்ளார். ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டு படுகாயம டைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் செந்தில்குமார் உயிரி ழந்தார். இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சத்துணவு சாப்பிட்டு, பாடம் எடுத்த ஆட்சியர்

அன்னூர், செப்.8- அன்னூர் அருகே அரசு பள்ளியில் சத்து ணவு சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி  வகுப்பறையில் மாணவர்களுடன்  கலந்துரை யாடினார். கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த  பட்டக்காரன் புதூர் கிராமத்தில் உள்ள அரசு  துவக்கப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய வகுப்பறைகளை கோவை மாவட்ட ஆட்சி யர் கிராந்திகுமார் பாடி வெள்ளியன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள சமை யலறைக்கு சென்று ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாணவர்களுக்காக தயார் செய்த உணவு மற்றும் சாம்பாரை ஆய்வு செய்தார்.  மேலும், சாப்பாட்டை வாங்கி சுவைத்து பார்த்த ஆட்சியர் மாணவர்களுக்கு என் னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது. சாம் பாரில் என்னென்ன காய்கறிகள் போடப்படு கிறது என அங்கிருந்த சத்துணவு பணியாளர் களிடம் கேட்டறிந்தார்.  அதன்பின்னர், அங்கிருந்து பள்ளி வகுப் பறைக்கு சென்ற ஆட்சியர் கிராந்தி குமார், மாணவ - மாணவிகளிடம் கலந்துரையாடி னார். அப்போது புத்தகத்தைப் பார்த்து  மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்திய  ஆட்சியர், அவர்களிடம் நன்றாக படிக்க  வேண்டும் என அறிவுரை வழங்கினார்.  இந்த நிகழ்வின் போது  அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ், அன்னூர் மேட்டுப்பாளையம் ஊராட்சி தலைவர் எம். எஸ்.பொன்னுசாமி, துணைத்தலைவர் கே.சி.ரவிக்குமார், ஒன்றிய பணி மேற்பார்வை யாளர் உபைத் ரகுமான், பொறியாளர் தங்க மணி உட்பட பலர் உடனிருந்தனர்.

ஏற்காட்டில் வாடகைக்கு இருசக்கர வாகனம் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை

சேலம், செப்.8- தமிழ்நாட்டின் சுற்றுலா தளங்களில் முக்கிய இடங்களில் ஒன்றான ஏற்காட்டிற்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள் ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா வருகின்றனர். இதனால் ஏற்காட்டில் வாடகை கார், வேன் மற்றும் ஆட்டோக்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின் றன. கடந்த சில மாதமாக ஏற்காடு வரும் சுற்றுலா பயணி களுக்கு இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவ தாக, வாடகை வாகனம் ஓட்டுபவர்கள் வட்டார போக்குவரத்து அதிகாரி, ஏற்காடு காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன் பேரில் சேலம் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோ தரன் வியாழனன்று ஏற்காடில் வாகன தணிக்கையில் ஈடு பட்டார். அப்பொழுது 7 இருசக்கர வாகனங்கள் முறையான ஆவணமின்றி இயக்கிய சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்களிடம் ரூ.70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும்,  ஒரு இருசக்கர வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்த னர்.

அரசு கல்லூரியில் சிறுதானிய கண்காட்சி

தருமபுரி, செப்.8- காரிமங்கலம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரி யில் நடைபெற்ற சிறுதானிய கண்காட்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கலை கல்லூரியில் ஊட்டச்சத்து மற்றும்  உணவு கட்டுப்பாட்டுத்துறை, உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சிறுதானிய கண்காட்சி மற்றும் உணவுப்பொருட் களின் பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். இதில் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டுத் துறை தலைவர் செந்தில்குமார், காரிமங்கலம் மற்றும் பாலக் கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச் சியை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டுத்துறையை சேர்ந்த மாணவிகள், சிறு தானியங்கள் மற்றும் சிறுதானியங்களால் செய்த உணவு வகைகளை காட்சிப்படுத்தினர். மேலும் கம்பு, திணை, வரகு, குதிரைவாலி, சாமை, கேழ்வரகு, சோளம் மற்றும் கொள்ளு உள்ளிட்ட சிறு தானியங்களில் இயற்கையாகவே புரதம், நார்சத்து, கால்சியம், இரும்புத்சத்து, வைட்டமின்கள், தாது  உப்புக்கள், காப்பர் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவற்றில் செய்யும் உணவு வகைகள் எளிதில் ஜீர ணம் ஆகக் கூடியது. முக்கியமாக மனிதர்களை பாதிக்கும் பல நோய்களிலிருந்து பாதுகாக்கக்கூடிய தன்மையும் ஆரோக் கியமான உடலை பராமரிக்க சிறுதானியங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக கண்காட்சியில் எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு கௌரவ விரிவுரையாளர்கள் பிரியா,  விஜயலட்சுமி, மதுவந்தி மற்றும் கல்லூரி மாணவிகள் ஆகி யோர் செய்திருந்தனர்.

பட்டுக்கூடு ஏலம்

தருமபுரி, செப்.8- தருமபுரியில் பட்டு வளர்ச் சித்துறை சார்பில் செயல் பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு, பல்வேறு மாவட்டங்களிலிருந்து விவ சாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வரு கின்றனர். இந்த அங்காடிக்கு வியாழனன்று 856 கிலோ பட்டுக்கூடுகள் கொண்டு வரப்பட்டன. இதில் ஒரு  கிலோ பட்டுக்கூடு அதிகபட்ச மாக ரூ.567க்கும், குறைந்த பட்சமாக ரூ.273க்கும் விற்ப னையானது. மொத்தம் ரூ.3 லட்சத்து 69 ஆயிரத்து 985க்கு வர்த்தகம் நடைபெற்றது.