districts

காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிடுக

தருமபுரி, டிச.28- காலிப் பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறை ஊழியர் சங்கத்தினர் தருமபுரி யில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டு வளர்ச்சித்துறையில் உள்ள 500க்கும் மேற்பட்ட இளநிலை ஆய்வா ளர் உள்ளிட்ட அனைத்து காலிப்பணி யிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். ஆய்வாளர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களுக்கும் தாம தமின்றி பதவி உயர்வு வழங்க வேண் டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று  வரும் தகுதியுள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெற் றவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய் வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் வட்ட தலைவர் எம்.நாத் தலைமை வகித்தார். இதில், மாநிலப் பொருளாளர் சி.கல்யாணசுந்தரம், வட்ட பொருளாளர் கே.கே.முரளி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில  துணைத் தலைவர் கோ.பழனியம் மாள், மாவட்ட பொருளாளர் கே.புக ழேந்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சி.காவேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக் கங்களை எழுப்பினர்.