சேலம், ஜூன் 11- தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட் டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி சேலத் தில் கையெழுத்து இயக்கம் ஞாயிறன்று துவங்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்கள்) சட் டம் 2023 எனும் மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளது. இது சட்டமானால், தமிழ்நாட்டில் தொழில் துவங்குவது என்கிற பெயரில் 100 ஹெக்டர் நிலத்தை யாரும் வாங்கலாம். அவ் வாறு வாங்கப்படும் பகுதியில் இருக்கும் நீர் நிலைகளைப் பராமரிப்பு என்கிற பெயரில் எவ்வளவு நிலப்பரப்பு வேண்டுமானாலும், அந்த நிறுவனம் அல்லது தனிநபர் எடுத்துக் கொள்ளலாம் என்கிறது இந்த சட்டம். இத னால், தமிழ்நாட்டின் நீர்நிலைகள் கொள்ளை போவதோடு மட்டுமல்லாமல், விளைநிலங் களும் அனைத்தும் கொள்ளைப் போகும். ஆகவே, இந்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில், மாநிலம் முழுவதும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடத்தில் கையெழுத்து பெற்று அதை தமிழ்நாடு அர சுக்கு அனுப்ப உள்ளது. சேலம் மாவட்டம், மேச்சேரியில் இந்த இயக்கம் ஞாயிறன்று துவங்கியது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் மேவை.சண்முகராஜா இதனை துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து விவசாயி கள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் பி.தங்கவேலு, சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஜி.மணிமுத்து, தவிச ஒன்றிய தலைவர் கே.மாது உள்ளிட் டோர் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில் தவிச ஒன்றிய செயலாளர் பி.பழனிசாமி, ஒன் றிய பொருளாளர் முத்துசாமி, துணைத்தலை வர் எம்.ரத்தினவேல், வழக்குரைஞர் எம்.அரு ணாசலம் உட்பட திரளானோர் கலந்து கொண் டனர்.