districts

img

வீட்டுமனை கேட்டு கையெழுத்து இயக்கம்

நாமக்கல், ஜன.29- இலவச வீட்டுமனை கேட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில், பெரியமணலி பகுதியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத்திற் குட்பட்ட பெரியமணலியைச் சேர்ந்த மக்கள், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இலவச வீட்டுமனை கேட்டு தொடர் போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், பெரிய மணலி பேருந்து நிறுத்தம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில், கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி பிப்.5 ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.