ஈரோடு, மார்ச் 13- பாஜக அரசின் புதிய மோட்டார் வாகன சட்டம் 2019ஐ திரும்பப் பெற வேண் டும் என வலியுறுத்தி சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர். புதிய மோட்டார் வாகன சட்டம் என்ற பெயரில் தொழிலாளருக்கும், தொழிலுக் கும் சாதகமான எதையும் பாஜக நிறைவேற்ற வில்லை. மாறாக கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான சட்டத்தினால் மோட்டார் வாகன தொழிலாளர்கள் கடும் துன்ப துயரங்க ளுக்கு ஆளாகி வருகின்றனர். 10ஆண்டு, 5 ஆண்டு சிறை என்பது பாசிச சட்டமாக உள்ளது. எனவே, மோட்டார் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை உறுதி செய்ய வேண்டும். பிஎன்எஸ் 106 (1)(2) சட்ட சரத்து களை நீக்க வேண்டும். பெட்ரோல், டீசல், டோல்கேட், இன்சூரன்ஸ்க்கான விலைக ளைக் குறைக்க வேண்டும். 15 வருட வாகன உடைப்பு கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத் தின் சார்பில், சூரம்பட்டி பகுதியில் கையெ ழுத்து இயக்கம் தொடங்கியது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கன கராஜ் தலைமையில் நடைபெற்ற இயக்கத் தில், சிஐடியு மாவட்ட உதவித் தலைவர் ஆர்.ரகுராமன், முன்னாள் செயலாளர் ப.மாரிமுத்து, சிவஞானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கையெழுத்து பெறும் படிவத்தை இந்தியா கூட்டணி தலைவர்களி டம் அளிக்கப்படும் என தலைவர்கள் தெரி வித்தனர்.