districts

img

நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

நாமக்கல், அக்.21- திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் திருச்செங்கோட்டில் சனியன்று நடைபெற்றது. நீட் விலக்கு, நம் இலக்கு என்ற முழக்கத்தை முன் வைத்து திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெறு கிறது. அதன்படி, தமிழகத்தில் 50 நாட்களில் 50 லட்சம்  கையெழுத்து பெறும் விதமாக கையெழுத்து இயக்கத்தை  வெள்ளியன்று சென்னையில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி  ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, நாமக்கல்  மேற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்செங்கோட்டில் உள்ள  தனியார் திருமண மண்டபத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. திருச்செங்கோட்டில், வனத்துறை அமைச்சர் மா.மதி வேந்தன், மாவட்டச் செயலாளர் மதுரா செந்தில் உள்ளிட்ட  500க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு துவக்கிவைத்தனர்.