திருப்பூர், நவ.27- திருப்பூரில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கம் மற்றும் கைரேகை பதிவு நிகழ்ச்சி திங்களன்று நடைபெற்றது. நாடு முழுவதும் திங்களன்று சர்வதேச பெண்களுக்கு எதி ரான வன்முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. பெண்க ளுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்வதை தடுக்கும் வகையில் மேற்கொள்ளக்கூடிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெற்றது. பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்ந்தால் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய 181 என்ற எண் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோடு, பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ரஞ்சிதா தேவி கலந்து கொண்டு துவக்கி வைத்து கையெழுத்திட்டு கைரேகை பதிவு செய்து நிகழ்வை துவக்கி வைத்தார்.