திருப்பூர், ஜன.24- தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதனன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருப்பூர் வடக்கு ஒன்றியம் சார்பில் பெருமாநல் லூரில் கையெழுத்து பிரச்சார இயக்கம் நடைபெற்றது. பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள், கட்டாய குழந்தை திருமணம், பாலின பாகுபாடு, சுதந்திரம், பாதுகாப்பு, உரிமைகள், பெண் கல்வியின் முக்கியத்துவம் உள் ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் வகையிலும், பெண் குழந்தைக ளுக்கு எதிராக நடைபெறும் குற்றங் களை தடுக்க மத்திய, மாநில அரசுகளை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருப்பூர் வடக்கு ஒன்றியக்குழு தலை வர் ரேவந்த் தலைமையில் இந்த கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், தொரவலூர் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பா.ஜெயலட்சுமி முதல் கையெழுத்திட்டு வாழ்த்துரை வழங்கி துவக்கி வைத்தார். இந்நி கழ்வின் நோக்கம் குறித்து ஒன்றியச் செயலாளர் சந்தோஷ் இசைப்பிரியன் விளக்கி பேசினார். இந்நிகழ்வில், வாலிபர் சங்க மாவட் டச் செயலாளர் மணிகண்டன், முன் னாள் மாவட்டத் தலைவர் ஆர்.காளியப் பன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேவராஜ், ராஜசேகர், ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் சங்க ஜி.சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர் கள் என 300 க்கும் மேற்பட்டோர் கையெ ழுத்திட்டனர். முடிவில், ஒன்றிய துணைச் செயலாளர் நரேந்திர பிரசாத் நன்றி கூறினார்.