districts

img

பாரபட்ச நடவடிக்கை: உடுமலை டிஎஸ்பி அலுவலகம் முற்றுகை

உடுமலை, செப்.5 - கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல் ஏற்பட்ட பிரச்சனையில், காவல் துறை ஒரு தரப்பினரை மட்டுமே கைது  செய்ததாக கூறி செவ்வாயன்று இன் னொரு தரப்பினர் துணை கண்காணிப் பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை தாலூகா, தும்பலப்பட்டி கிராமத்தில் கடந்த 2ஆம் தேதி விநாய கர் கோவில் குடமுழுக்கு நடைபெற் றது. அப்போது இரு பிரிவு மக்களி டையே மோதல் ஏற்பட்டது. இதைத்  தொடர்ந்து அமாரவதி காவல்நிலை யத்தில் இருதரப்பினரும் புகார் தெரி வித்தினர். அதன் அடிப்படையில் காவல் துறை வழக்குப் பதிவு செய்து ஒரு தரப் பினருக்கு ஆதரவாக செயல்படும் வித மாக பல நபர்களை கைது செய்து உள்ள னர்.  இதைக்கண்டித்து செவ்வாயன்று உடுமலையில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற் றுகையிட்டு மற்றொரு தரப்பினர் போராட்டம் நடத்தினர். இது குறித்து போராட்டதில் ஈடுபட்டவர்களிடம் கேட் டபோது, எங்கள் ஊரில் நடத்த கோவில்  விழாவில் எங்களை அவமதிக்கும் நோக்கத்தில், அன்னதானம் சாப்பிட சென்ற எங்களை தாக்கினார்கள். அவர் கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக் கவில்லை. மாறாக எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். எங்கள் மீது உள்ள பொய் வழக்குகளை உடன டியாக ரத்து செய்ய வேண்டும். மேலும்  பொய் வழக்கு பதிவு செய்த காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துணை  கண்காணிப்பாளரிடம் மனு அளித்த தாகத் தெரிவித்தனர்.