இளம்பிள்ளை, ஏப்.7- தூதனூர் பகுதி மக்கள் குடிநீர் கேட்டு இடங்கணசாலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா பேராட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் மாவட்டம் ,சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்கணசாலை நக ராட்சி 2-வது வார்டு தூதனூர் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக காவிரி குடிநீர் முறையாக விநியோகம் செய்யப் படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து இடங்கணசாலை நகராட்சி தலைவ ரிடமும், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தண்ணீர் வராததால் கடும் அதிருப்தியடைந்த அப்பகுதி பெண் கள் உள்பட 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் காலிக்குடங்களுடன் இடங்கண சாலை நகராட்சி அலுவலகத்தை வியாழ னன்று முற்றுகையிட்டு தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நக ராட்சி தலைவர் கமலக்கண்ணன், பொதுமக் களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது ஒரு வாரத்தில் குடிநீர் விநியோ கம் முறைப்படுத்தப்படும் என உறுதியளித் தார். இதன்பின்னர் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்ற னர். இதனால் அப்பகுதியில் பெரும் பர பரப்பு காணப்பட்டது.