districts

img

விவசாயத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனைக்கோரி

நாமக்கல்.ஏப்.20- நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வீடு இல்லாத மக்களுக்கு இல வச வீட்டுமனை வழங்க வேண்டும். மின் வாரியத்தில் பதிவு செய்துள்ள  விவசாயிகளுக்கு மின் இணைப்பு  வழங்க வேண்டும். ஆயில் இன்ஜின் வைத்துள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். ஊரக வேலை திட்டத் தில் புதிதாக கொண்டு வந்த சட்ட  பிரிவு 43ஐ ரத்து செய்ய வேண்டும். அனைவரும் பயன்படுத்தும் வகை யில், மாவட்ட அலுவலகம் முன்பு பொது குடிநீர் குழாய் அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட  பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  சங்கத் தின் மாவட்டத் தலைவர் சி.துரை சாமி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ஜி. கணபதி,  மாவட்டச் செயலாளர் வி.பி.சபாபதி, மாவட்ட உதவித் தலைவர் பி.செல்வராஜ்  ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி. வாழ்த்தி பேசினார். இறுதியாக மாவட்ட துணைத் தலைவர் குப்பண்னன் நன்றியுரையாற்றினார். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயி கள் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.