தருமபுரி, பிப்.14- குடியிருப்புப் பகுதியில் கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரி வித்து, கும்பளப்பாடி கரடிகால் குண்டு கொட்டாய் கிராம மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் போராட்டத்தில் ஈடு பட்டனர். தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி ஒன்றியம், நாகர்கூடல் பஞ் சாயத்திற்குட்பட்டது கும்பளப்பாடி கரடிகால்குண்டு கொட்டாய் கிரா மம். இப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சிறு, குறு விவசாயிகளாக உள்ளனர். கடந்த 5 வருடத்திற்கு முன்பு தனிநபர் ஒருவர் இக்கிராமத்தில் சுமார் 20 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். இந்நிலத்தில் அரசு புறம்போக்கு நிலமும் அடங் கும். தற்போது அந்த நிலத்தில் கல் குவாரி அமைக்க அனைத்து நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்.11 ஆம் தேதி யன்று உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை களும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், அதிகாரிகளும், காவல் துறையினரும் கல்குவாரி அமைக் கும் முதலாளிகளுக்கு சாதமாக இருப்பதாக குற்றஞ்சாட்டி அப் பகுதி பொதுமக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரை யில் அமர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டனர். இவர்களிடம் காவல் துறை யினர் பேச்சுவார்த்தை நடத்தியதின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.