உதகை, செப்.1- சங்பரிவார அமைப்பின் ஒன்றான விசுவ ஹிந்து பரிசத் அமைப்பின் ஊர்வலத்தை நீலகிரி மாவட்டம், கேத்தி காவல் ஆய்வாளர் துவக்கி வைப்பதாக விநியோகிக்கப்படும் துண்டறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் பல முக மூடிகளிள் விசுவ ஹிந்து பரிசத்தும் ஒன்று. நாடு முழுவதும் வகுப்புவாத நடவடிக்கையில் முன்னணியில் நிற் கும் அமைப்பாக விசுவஹிந் பரிசத் உள்ளது. தற்போது ஹரியான மாநி லத்தில் நடைபெறும் கலவரத்தின் பின் னனி, முன்னணியில் இவ்வமைப்பே உள்ளது என்பது சமூக ஆர்வலர் களின் குற்றச்சாட்டாக உள்ளது. இந் நிலையில், இத்தகைய அமைப்பின் நிகழ்வுகளில் தமிழக காவல்துறை அதிகாரி ஒருவர் தலைமையேற்று ஊர்வலத்தை துவக்கிவைக்கிறார் என்கிற செய்தி அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகையில் விசுவ ஹிந்து பரிசத் அமைப்பு, கோகுல அஷ்டமியை முன்னிட்டு செப்.9 ஆம் தேதியன்று ஊர்வலம் நடத்த துண்டறிக்கை விநியோகம் செய்து வருகிறது. இந்நிகழ்வில், விசுவ ஹிந்து அமைப்பின் தலைவர் கள் பங்கேற்க உள்ளதாகவும், கோகு லஷ்டமி ஊர்வலத்தை கேத்தி காவல் ஆய்வாளர் துவக்கி வைப்பார் என அச்சிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கேத்தி காவல் ஆய்வாளரிடம் கேட் கையில், நான் அப்படி எந்த நிகழ்ச்சிக் கும் ஒப்புக்கொள்ளவில்லை. நான் அந்த நிகழ்விற்கு பாதுகாப்பு ஏற்பாடு களுக்கு மட்டும்தான் செல்ல உள் ளேன். எனக்கே தெரியாமல் அவ் வாறு துண்டறிக்கை அச்சடிக்கப்பட் டுள்ளது, என்றார். பிஞ்சுகள் நெஞ்சில் நஞ்சை கலக் கும் மதவெறி அமைப்புகள் தங் களின் சுயநலத்திற்காக, தங்களின் உண்மை முகமூடியை மறைத்துக் கொண்டு, இதுபோன்ற பிரபலங்களின் பெயர்களை கேட்காமலேயே போட்டு விடுகின்றனர். பின்னர், அந்த துண்ட றிக்கையை வியாபாரிகளிடம், பொது மக்களிடம் விநியோகித்து வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். இன் னும் சில அதிகாரிகளுக்கு இவ் வமைப்பின் பின்னனி தெரியாமல் அப் பாவித்தனமாக ஒப்புக்கொள்வதும் உண்டு என சமூக ஆர்வலர்கள் தெரி வித்துள்ளனர்.