நாமக்கல், ஜன.2- மின்சாரத்துறையை தனியாருக்கு தாரை வார்க்க துடிக் கும் ஒன்றிய மோடி அரசிற்கு சமூக நீதிக் கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில், சமூக நீதிக் கூட்டமைப்பின் ஆலோச னைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் அசன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் மூலம் மின்சாரத் துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற் சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய மழை வெள்ள நிவாரண நிதியை தாமதமின்றி உட னடியாக முழுமையாக வழங்க வேண்டும். மாநில சுயாட் சியை பறிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, ஜன.7 ஆம் தேதியன்று ஆவரங்காடு பகுதியில் கண்டன தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடத்து வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.