கோவை, ஜூன் 25- கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவி வருவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச் சிக்கு முக்கியக் காரணமாக எரி பொருட்கள் உள்ளது. மோட்டார் வாகனப் போக்குவரத்தில் தொடங்கி தொழிற்சாலைகள் வரை அனைத்துக்கும் எரிபொருட்கள் தான் முக்கிய ஆதாரமாக உள் ளது. ஆனால், சமீப காலமாக எரி பொருள் விலை இதுவரை இல்லாத வகையில் அபரிமிதமாக அதிக ரித்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோல் டீசலை ஜி.எஸ்.டி வரிக் குள் கொண்டு வரவேண்டும். எரி பொருள் விலையை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அரசியல் கட்சி யினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடு பட்டு வருகின்றனர். இதனிடையே கோவை மாவட் டத்தில் கடந்த சில நாட்களாக பெட் ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவி வரு கிறது.
குறிப்பாக கடந்த வாரம் பெட் ரோல், டீசல் தட்டுப்பாடு காரண மாக, வாகனங்கள் முதல் தொழிற் சாலைகள் வரை அனைத்தின் இயக்கமும் பாதிக்கப்பட்டது. டீசல் தட்டுப்பாடு காரணமாக விவசா யம் உள்ளிட்ட தொழில்கள் பாதிக் கப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு தொடரும் பட்சத்தில் அது கடுமையாக பாதிக்கும் என அச்சம் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு மலை நகரமான உதகையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இத னைத்தொடர்ந்து கோவை மாவட் டம் வால்பாறையிலும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. அங் குள்ள 2 பங்குகளிலும் எரிபொருள் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட தால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனிடையே கோவை மாவட்டத்தின் பல பகுதிக ளிலும் உள்ள பங்குகளில் எரி பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள் ளது. தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பங்கு களில் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை மட்டும் பொட்ரோல் போடப்படுகிறது. கார் களுக்கு ரூ.500 வரை மட்டுமே எரி பொருள் நிரப்பப்படுகிறது. ஒரு சில பங்குகளில் எரிபொருள் இல்லை என்ற அறிவிப்பு பலகையே வைக் கப்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந் தால், எரிபொருள் கிடைக்காமல் மக் கள் அவதியடையும் நிலை ஏற் படும் அபாயம் உள்ளது. பெட்ரோலிய நிறுவனங்கள் குறித்த நேரத்தில் எரிபொருள் சப்ளை செய்யாமல் இருப்பதே இந்த தட்டுப்பாடுக்கு காரணம் என்று பங்கு உரிமையாளர்கள் தெரி விக்கின்றனர்.