தருமபுரி, ஆக.26- பேருந்து பற்றாக்குறையால் கல் லூரி மாணவிகள் நாள்தோறும் அவதிக் குள்ளாகின்றனர். தருமபுரி நகரத்தையொட்டி, அரசு கலை கல்லூரிகள், பாலிடெக்னிக் ஐடிஐ ஆகியவை உள்ளது. தருமபுரி மாவட் டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தினந்தோறும் தருமபுரி நகர பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக, தருமபுரியில் இருந்து 18 கி.மீ தொலைவில் உள்ள காரிமங்கலம் அரசு மகளிர் கலைக் கல்லூரிக்கு 300க் கும் மேற்பட்ட மாணவிகள் தருமபுரி நகர பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், காலையில் 9 மணி முதல் 9.30 மணி வரை நகரப் பேருந்து கள் குறைவாக இயக்குவதால் மாணவி கள், கல்லூரிக்கு சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் பேருந்து களில் போட்டி போட்டுக் கொண்டு ஏறு கின்றனர். அதேபோல் மாலையில் கல்லூரி முடிந்து வீட்டிற்கு திரும்பும் போதும் பேருந்துக்காக பல மணி நேரம் காத்தி ருக்கின்றனர். இதுகுறித்து கல்லூரி மாணவிகள் கூறுகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மாணவர் கள், தருமபுரி பேருந்து நிலையத்திற்கு வருகின்றனர். கல்லூரி நேரத்தில் பேருந்து வருவதில்லை இதனால் காத் திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது. எனவே, கல்லூரி நேரங்களில் முறை யான பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர்.