districts

img

நாமக்கல்: தமுஎகச சார்பில் குறும்பட பயிற்சி முகாம்

நாமக்கல், ஆக.14- திருச்செங்கோட்டில் தமுஎகச சார் பில் குறும்பட பயிற்சி முகாம் நடை பெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருச்செங் கோடு நகரக்கிளை சார்பில் ஞாயிறன்று குறும்பட பயிற்சி முகாம், திருச்செங் கோடு கொங்கு வேளாளர் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இம்முகா மிற்கு தமுஎகச மாவட்டத் தலைவர் ஜி.கோபி தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் மோ.நித்தியானந்தன் வர வேற்றார். இந்நிகழ்ச்சியில் முதல் அமர்வு “குறும்படம் உருவாக்குதல்” என்ற தலைப்பில் தாகம், ஏகலைவன் குறும்படங்களின் இயக்குநர் அருண் பகத், குறும்படம் திரையிட்டு அதன் அனுபவங்கள், எடுக்கப்பட்ட விதங்கள்  குறித்து உரையாற்றினார்.  இதைத்தொடர்ந்து “கதைத் தேர் வும், அணுகுமுறை” என்ற தலைப்பில்  தமுஎகச மாநிலப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, குறும்படங்க ளுக்கு கதைகளை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்; எப்படி அணுக வேண் டும் என உரையாற்றினார். “கதை, திரைக் ்கதை, வசனம்” என்ற தலைப்பில் நக் கலைட்ஸ் யூடியூப் சேனல் புகழ், முன் னணி திரைப்பட நடிகர் பிரசன்னா பாலச்சந்திரன், “திரைப்படம் – இயக் கம்” என்ற தலைப்பில் திரைப்பட இயக் குநர் சசி ஆகியோர் உரையாற்றினார். தமுஎகச திரை இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐ.தமிழ்மணி மற் றும் நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ். சேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில், கிளைப் பொருளாளர் ஜெ.திவாகர் நன்றி கூறி னார்.