நாமக்கல், ஜன.2- இந்திய மாணவர்கள் சங்கம் சார் பில் கலந்துரையாடல் நிகழ்வு நடை பெற்றது. இதில் 2023-யில் நடத்திய நிகழ்வுகளையும், 2024-யில் நடை பெறும் நிகழ்வுகளையும் கலந்துரை யாடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள பூங்கா வில் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் 2023-ல் இந்திய மாணவர் சங்கம் நடத் திய போராட்ட அனுபவங்கள் குறித்த பகிர்வு நிகழ்வு நடைபெற்றது. 2024 யில் ஜனவரியில் நடைபெறக்கூடிய இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நாடாளுமன்றம் நோக்கிய பேரணி மற் றும் பிப்ரவரியில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம், அதன் கோரிக் கைகளும் பற்றி விளக்கி பேசப்பட்டது. எதிர் வரும் சவால்களை எதிர்கொண்டு அமைப்பை வளர்த்துவதற்கும், கூடுத லான வேலைகளை செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இந்திய மாணவர் சங்க மாவட்ட நிர்வா கிகள், கல்லூரி மாணவர்கள் பலர் பங் கேற்றனர்.